Monday 27 June 2011

முருகன் கோபம் தணிந்த இடம்


முருகன் கோயில்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் விழா கந்தசஷ்டி பெருவிழாவாகும்.  இந்த விழா பத்து நாட்கள் நடக்கும் .  காஞ்சி, குமரக்கோட்டத்தில் பத்துநாள் புறப்பாடும் கோலாகமாக இருக்கும்.  முருகப் பெருமானின் சேனைத் தலைவனான வீரபாகுவின் வடிவத்தையும் அவனுடன் தோன்றிய மற்ற வீரபாகுகளின் வடிவத்தையும் வேடமிட்டு தாங்கி, கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போர் முழக்கம் செய்து ஆர்ப்பரித்துச் செல்லும் நவவீரபாகுகளை பார்க்கும் போதே ஒரு பக்கத்தில் அச்சமும், இன்னொரு பக்கம் தெய்வீக உணர்வும் மேலிடும்.  திருத்தணியில் மட்டும்தான் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் இல்லை.  முருகப் பெருமான் கோபம் தணிந்து சாந்தமாக எழுந்தருளியிருக்கும் தலம் திருத்தணி. செரு என்றால் கோபம் செரு தணிந்த இடம் திருத்தணி என்பது புராணம்.
கந்தசஷ்டி பத்துநாள் விழாக்களில் நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சிக்கலில் முதல் நாள் விழா மிகவும் விசேஷம்.  சூரசம்ஹாரம் நிகழ்ந்த இடத்துக்கு அருகிலுள்ள திருச்செந்தூரில் பத்தாம் நாள் விழா சூரசம்ஹார விழா மிகவும் விசேஷம்.