Monday 27 June 2011

முருகன் கோபம் தணிந்த இடம்


முருகன் கோயில்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் விழா கந்தசஷ்டி பெருவிழாவாகும்.  இந்த விழா பத்து நாட்கள் நடக்கும் .  காஞ்சி, குமரக்கோட்டத்தில் பத்துநாள் புறப்பாடும் கோலாகமாக இருக்கும்.  முருகப் பெருமானின் சேனைத் தலைவனான வீரபாகுவின் வடிவத்தையும் அவனுடன் தோன்றிய மற்ற வீரபாகுகளின் வடிவத்தையும் வேடமிட்டு தாங்கி, கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போர் முழக்கம் செய்து ஆர்ப்பரித்துச் செல்லும் நவவீரபாகுகளை பார்க்கும் போதே ஒரு பக்கத்தில் அச்சமும், இன்னொரு பக்கம் தெய்வீக உணர்வும் மேலிடும்.  திருத்தணியில் மட்டும்தான் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் இல்லை.  முருகப் பெருமான் கோபம் தணிந்து சாந்தமாக எழுந்தருளியிருக்கும் தலம் திருத்தணி. செரு என்றால் கோபம் செரு தணிந்த இடம் திருத்தணி என்பது புராணம்.
கந்தசஷ்டி பத்துநாள் விழாக்களில் நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சிக்கலில் முதல் நாள் விழா மிகவும் விசேஷம்.  சூரசம்ஹாரம் நிகழ்ந்த இடத்துக்கு அருகிலுள்ள திருச்செந்தூரில் பத்தாம் நாள் விழா சூரசம்ஹார விழா மிகவும் விசேஷம்.


Sunday 26 June 2011

உலகக் கடவுள் முருகன்


குழுவாய்க் கூடி வாழத் துவங்கிய நம் முன்னோர் தம் தவ வலிமையால் கண்டுணர்ந்தனர் ஒரு மாபெரும் சக்தியை. அது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையும், இப்புவியில் வாழும் உயிர்களையும் மிக முக்கியமாய் சிவந்த கிரகமான செவ்வாய் கிரகத்தை கட்டுப் படுத்துவதையும் அறிந்தனர். அதனை போர்க்கடவுள் என்றும் உணர்ந்து முருகன் என்று பெயரிட்டு வழிபடத்துவங்கினர்.
                        ஞானம் என்பது ஒரு நிலத்தில் மட்டுமே பூக்கும் பூ அல்ல. அது உலகம் முழுதும் மலர்கின்ற பொதுவான ஒரு விஷயம். முருகன் பற்றிய இதே கருத்தை இவ்வுலகத்தில் வாழ்ந்த வேறு சிலரும் அறிந்திருந்தனர். அதனைக் காண்போம் வாருங்கள்!


வேதம் உணர்ந்த ஸ்கந்தன்:
நாம் முருகனாய் உணர்ந்த அம்மாபெரும் சக்தியை ஸ்கந்தன் என்று உணர்ந்தனர் வேதம் அறிந்த ஞானிகள். ஸ்கந்தன் / கார்த்திகேயன் ஒரு போர்க்கடவுள் என்பதையும் ‘மங்கள்’ என்று வடமொழியில் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் அதிபதி என்றும் கண்டுகொண்ட வேத மனம் அவரை ‘மங்களேஸ்வரர்’ என வணங்கி நல்வாழ்வு பெற்றது.

சைனீஸ் ஸ்கந்தன் /வே த்வோ (Wei Tuo):
இந்தியாவிலிருந்து சென்ற புத்த மதத்தால் ஞானத்தின் பல்வேறு நிலைகளை கண்டறிந்தனர் சைன தேசத்து ஞானிகள். புத்த மதம் சைனத்து பழங்குடி மதங்களோடு கலந்து அவர்களது ஆதி காலக் கடவுள்கள் சிலரையும் சுவீகரித்துக் கொண்டது. அதில் ஒருவர்தான் ஸ்கந்தன் என்றும் அழைக்கப்படும் போர்க்கடவுள் வே த்வோ.

கிரேக்க அரேஸ் (Ares):
தமிழ் இனத்தினைப் போலவே தொன்மையான நாகரீகமும் பண்பாடும் கொண்டது கிரேக்க இனம். நமது ஞானிகள் முருகனைக் கண்டறியும்போது அவர்களுக்கு மட்டும் இம்மாபெரும் சக்தி தெரியாமல் இருக்குமா என்ன? அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் அரேஸ். கிரேக்கத்துப் போர்க்கடவுள்.

ரோமானிய மார்ஸ் (Mars):
ஆம். செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான மார்ஸ் ரோமானிய போர்க்கடவுளான மார்ஸ்-ஐக் குறிப்பதே. நாம் முருகனை அழைப்பது போன்றே, ரோமனியர் மார்ஸ் தங்களின் மூதாதையர் என்றும் தாங்கள் அவரது சந்ததியினர் என்றும் அழைத்துக்கொண்டனர்.
                            
ரோமனியர் இப்பெயரை ‘எட்ருஷ்கன் (Etruscan)’ இனத்துக் கடவுளான மாரிஸ் (Maris)-இடமிருந்து பெற்றனர். இந்த மாரிஸ்க்கு உள்ள மற்றொரு பெயர் மாரிஸ் ஹஸ்ரன்னா(Maris Husranna). இதன் பொருள் ‘குழந்தை மாரிஸ்’ . நமது ‘பால முருகன்’ ஞாபகம் வருகிறதா? வரத்தான் செய்யும்..எங்கும் நிறைந்த ஞான பண்டிதன் அல்லவா அவன்.

 நார்டிக் டைர் (Tyr):
நார்வே தேசத்து மக்களின் பழங்குடிக் கடவுளான டைர் ஒரு போர்க்கடவுளே. இவரது பெயரிலிருந்துதான் செவ்வாய்க்கிழமையை ஆங்கிலத்தில் குறிக்கும் Tuesdayபெறப்பட்டது.

குஷைட் முரிக் (Murik):
ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா மற்றும் நூபியாவை உள்ளடக்கிய நாடாக ஆதியில் விளங்கிய குஷைட்(Cushite) தேச மக்களின் போர்க்கடவுளின் பெயர் ‘முரிக்’. ஏறக்குறைய முருகா! ஆச்சரியம் தான் அல்லவா? தற்பொழுது அழிந்து போய்விட்ட குஷைட் இன மக்களில் சிலர் மட்டும் கென்யாவில் வசித்து வருகின்றனர் முரிக் பக்தியுடன்!

முருகன் எல்லா தேசங்களிலும் போர்க்கடவுள் என்றும் செவ்வாய் கிரக அதிபதி என்றும் தவத்தில் சிறந்த ஞானிகளால் பாமர மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளான்.
தமிழிலும் ‘செவ்வாய் அதிபதியானதால் முருகன் சேந்தன் ( சிவந்த நிறத்தை உடையவன்) என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டான்; இல்லையேல் திராவிட வேலனுக்கேது சிவந்த நிறம்?

இத்தகு சிறப்பு வாய்ந்த முருகனை தமிழ்க் கடவுள் என்று மட்டும் சொல்லாது உலகக் கடவுள் என்றும் சொல்லலாம்தானே?

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்வ வெற்பைக்
கூறுசெய் தணிவேல் வாழ்க குக்கிடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞைவாழ்க யானைதன் அணங்கும் வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியாரெல்லாம்!


கந்தவேல் நம் முன் வந்து பாதுகாப்பளிக்கும்


எவ்வளவு பெரிய இடைஞ்சலாக இருக்கட்டுமே! தெய்வங்களுக்கு எதிராக ஏதோ தவறு செய்து, அதனால் ஏற்பட்ட பாவமாகக் கூட இருக்கட்டுமே! கந்தவேலிடம் சரணடைந்து விட்டால் போதும்! அவர் நம்மைக் கருணையுடன் காத்தருள்வான்.
காஷ்யபர் என்ற முனிவருக்கு அதிதி என்ற மனைவியிடம் தோன்றியவர்கள் ஆதித்யர்கள் எனப்படும் தேவர்கள். திதி என்ற மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தைத்திரியர்கள் எனப்படும் அசுரர்கள். இவர்களுக்கு இடையே கடுமையாகச் சண்டை நடக்கும். தேவர்களுக்கு தெய்வங்களின் துணை இருந்ததால், அவர்கள் அசுரர்களைக் கொன்று குவித்தனர். ஒரு கட்டத்தில் அசுரர்களே இல்லாத நிலைமை ஏற்பட்டது. இதுகண்டு திதி தவித்தாள். ஆயிரக்கணக்கில் பிள்ளைகளைப் பெற்றும், ஒன்று கூட தங்கவில்லையென்றால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!
ஆனால், அவள் ஒரு சிறந்த தாயல்ல.
கணவனுடனும் அடிக்கடி கருத்து வேறுபாடு கொள்வாள். திதிக்கு பல குழந்தைகள் பிறந்தனர். அவர்களை தவவழியில் சென்று இறைவனை அடையுமாறு தந்தை காஷ்யபர் அறிவுறுத்தினார். தாய் திதியோ, ""அவர் கிடக்கிறார், நீங்கள் இந்த உலகத்தையே உங்கள் கைக்குள் கொண்டு வர வேண்டும். உலகெங்கும் அசுரக்கொடி பறக்க வேண்டும்,'' என்றாள். போதாக்குறைக்கு இவர்களுக்கு கிடைத்த குரு சுக்ராச்சாரியாரும் தூபம் போட்டார். சுக்கிரன் இன்பத்திற்கு அதிபதி. இன்பவாழ்வைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்ய வைப்பார்! இது இயற்கை. அசுரக்குழந்தைகளுக்கும் அம்மா, ஆசானின் போதனைகள் மனதில் பதிந்து விட்டன. அப்பாவின் நற்போதனையை ஒதுக்கி விட்டனர். ஆனால், இதன் விளைவை அவர்கள் அனுபவித்தனர். தேவர்கள் ஒன்று கூடி, ஒரு அசுரர் கூட விடாமல் அழித்து விட்டனர். திதி அழுதாள். தனக்கு மேலும் குழந்தைகள் வேண்டும். வம்சம் தழைக்க வேண்டுமென தன் கணவர் காஷ்யபரிடம்
முறையிட்டாள்.
""புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தான் குழந்தைகள்
பிறக்கும்,'' என்ற காஷ்யபர் மனைவிக்காக யாகத்தைத் துவங்கினார். மிகக்கடுமையான அனுஷ்டானங் களுடன் யாகம் தொடங்கியது.
""காஷ்யபர் சிறந்த மகரிஷி. அவரது யாகம் மட்டும் முற்றுப்பெற்று விட்டால், அசுர இனம் மீண்டும் தலை தூக்கி விடும். நாம் எப்படியேனும், அந்த யாகத்தை நிறுத்தியே ஆக வேண்டும்,'' என முடிவெடுத்தனர்.
இதை தன் ஞானதிருஷ்டியால் அறிந்து விட்டார் காஷ்யபர். அவருக்குத் தெரியும், யாரை அணுகினால் யாகம் வெற்றிகரமாக நடந்து முடியுமென்று! யாகங்கள் சுபமாக முடிய @வண்டும் என்று காஷ்யபர் கந்தவேலை நினைத்தார். அவரது பிரார்த்தனை இதுதான். (யாகம் துவங்கும் ஒவ்வொருவரும் இந்த பிரார்த்தனையைச் சொல்லலாம்)
""யார் அக்னி வடிவாய்
இருக்கிறாரோ, யார் மேஷ (ஆடு) வாகனத்தில் அமர்ந்து வருகிறாரோ, அந்த மூர்த்தி அடியேனையும், யாகத்தையும் காத்தருள வேண்டும். "சிவாக்கினி பூ' என்று வேதங்களால் அழைக்கப்படும் பொருளாய் இருப்பவர் யாரோ, குமரன் என்பவர் யாரோ, திரியம்பகன் என்பவர் யாரோ, அந்தக்கடவுள் என்னையும், யாகத்தையும் காத்தருள வேண்டும்,'' என்றார்.
உடனே முருகப்
பெருமான் வேலுடன் அங்கு தோன்றினார். ""காஷ்யபரே! கவலை வேண்டாம்! என்னை வணங்கியவர்
களின் யாகம் வெற்றிகர மாகத் திகழ எமது வேல் துணை நிற்கும்,'' என்று கூறி மறைந்தார்.
இதையடுத்து தேவர்கள் கலங்கினர். அவர்கள் இரண்டு அசுர சக்திகளை <உருவாக்கிய யாககுண்டத்தில் இருந்து வெளிப்படச் செய்தனர். காஷ்யபர் அவற்றைக் கண்டு நடுங்கினார். மீண்டும் முருகப்பெருமானை வணங்கினார்.
""ஞானசக்திதரா! பாலமுருகா! சரணம், சரணம்'' என்று கதறினார். அக்கணமே அங்கு தோன்றிய முருகப்பெருமான், அந்த அசுரர்களை அழித்தார். யாகம் வெற்றிகரமாக முடிந்தது. திதியும் கருவுற்றாள்.
தன்னை மனதார நம்பியவர்கள் யாராயினும் கைவிடமாட்டான் முருகன். அவன் வரும் முன்
அவனது கந்தவேல் நம் முன் வந்து பாதுகாப்பளிக்கும்.

முருக வழிபாடு


உலகின் பல்வேறு சமயங்களிலும் மாந்ரீக அடிப்படையிலான வழிபாட்டு முறை வழக்கில் இருந்துள்ளது; இப்போதும் நடைமுறையில் உள்ளது.

மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப் படுகின்றன.

இத்தகைய வழிபாடுகளில் மந்திர உச்சாடனங்களுடன் மாந்ரீகச் சடங்குகளும் இடம் பெறுகின்றன. ஆக்கல் சக்திகள் தூண்டிவிடப்படுவதன் மூலமாக செயல்கள் நிகழ்ந்து தங்கள் விருப்பங்கள் நிறைவேறு வதால், இவ்வழிபாடு பலராலும் பின்பற்றப் பட்டு வருகிறது. இதில் யந்திரங்கள் கிரியா ஊக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்தப் பயன்படுகிறது.

முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத் தப்படுகிறது. இச்சக்கரத் தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர் திசையில் படியு மாறு அமைக்கப்பட்டிருக் கும். இரண்டு முக்கோணங் களுக்கு நடுவில் அமைந் துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக் கொள்ளப் படு கிறது. இதைச் சுற்றியுள்ள உலகின் பல்வேறு சமயங்களிலும் மாந்ரீக அடிப்படையிலான வழிபாட்டு முறை வழக்கில் இருந்துள்ளது; இப்போதும் நடைமுறையில் உள்ளது.

மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப் படுகின்றன.

இத்தகைய வழிபாடுகளில் மந்திர உச்சாடனங்களுடன் மாந்ரீகச் சடங்குகளும் இடம் பெறுகின்றன. ஆக்கல் சக்திகள் தூண்டிவிடப்படுவதன் மூலமாக செயல்கள் நிகழ்ந்து தங்கள் விருப்பங்கள் நிறைவேறு வதால், இவ்வழிபாடு பலராலும் பின்பற்றப் பட்டு வருகிறது. இதில் யந்திரங்கள் கிரியா ஊக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.


யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்தப் பயன்படுகிறது.

முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத் தப்படுகிறது. இச்சக்கரத் தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர் திசையில் படியு மாறு அமைக்கப்பட்டிருக் கும். இரண்டு முக்கோணங் களுக்கு நடுவில் அமைந் துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக் கொள்ளப் படுகிறது. இதைச் சுற்றியுள்ள தனிவட்ட வளையங்களில்- உள்வட்டத்தில் ஆறு தாமரை இதழ்களும், வெளி வட்டத்தில் பன்னிரண்டு தாமரை இதழ்களும் வரையப் பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி பூபுரம் எனப் படும் மூன்று சம இடைவெளியுடன்- நான்கு பக்கங்களிலும் மூன்று சதுரங்கள் வரையப் பட்டிருக்கும்.

பூபுரம் என்ற வெளிச்சுற்று சதுரச் சுவர்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக உள்ளடங்கி மனதைக் கட்டுப்படுத்தி, மைய ஈர்ப்புப் புள்ளி யுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால், தாம் விரும்பு வது எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள "நமசிவாய' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஒட்டி முருகனுக்கு "சரவணபவ' என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக் காகப் பயன்படுத்தப்படுகிறது.

வழிபாட்டு மந்திரத்தின் எழுத்துகளை முறை மாற்றி உச்சரிப்பதன் மூலம் விளைவுகள் வேறுபட்டதாயிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஷடாட்சர மந்திரத்திற்கான யந்திரத்தை அமைக்க குறுக்கும் நெடுக்குமாக ஏழு கோடுகள் வரைந்தால் 36 சிறு கட்டங்கள் கிடைக்கும். அந்தந்த காரியங்களுக்கான வகையில் அந்தக் கட்டங்களில் எழுத்துகளை எழுதி, அவற்றிற் குரிய கோச மந்திரங்களும் குறிக்கப்படும். (முன் பக்க அட்டவணை காண்க.)



இவை வெவ்வேறு முறைகளிலும் எழுதப் படும். இந்த மந்திரங்களை ஆறு வகையான பணிகளுக்காக மரப் பலகைகளில் எழுதி வைத்து, 1008 முறை உச்சரிப்பதன் மூலம் விரும்பிய பலனைப் பெறலாம் எனப்படுகிறது. வசியத்திற்கு வில்வ மரத்திலும், ஆகர்ஷணத்திற்கு வெண் நாவல் மரத்திலும், மோகனத்திற்கு அலரி மரத்திலும், தம்பனத்திற்கு ஆல மரத்தி லும், உச்சாடனத்திற்கு பலா மரத்திலும், மாரணத்திற்கு வில்வ மரத்திலும் எழுதுவதே பலனளிக்கக் கூடியதாம்.

சில மந்திரங்களை பீஜத்தோடும் சிலவற்றை கோசத்தோடும் உச்சரிக்க வேண்டும். தேவை யான பீஜ, கோசங்களைச் சேர்த்து மந்திரங்களை உச்சரிப்பதே பலன் தரும்.

மனனம் செய்பவனை ரட்சிப்பது மந்திர மாகும். மெய்ஞ்ஞானிகள் மந்திர ஜபத்தால் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்திருக்கி றார்கள். மந்திரங்களை முறையாக உச்சரிப்பதால் அதற்குரிய தேவதையின் திருவுருவம் சூட்சும வடிவில் உபாசகனின்முன் தோன்றுகிறது. மந்திர உச்சாடனம் செய்வதன் மூலம் சூட்சும சலனங்களை ஏற்படுத்தி விரும்பியவற்றை அடைவதோடு இறைவன் திருவருளையும் பெற முடியும்.


"நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், "எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது


ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி மேன்மேலும் சிறப்பு பெறுகிறது.

சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை யாவரும் அறிந்ததே.

சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல் வாகனமாகவும் கொடியாகவும் ஏற்றுக் கொண்டது ஏன் என்ற கேள்விக்கு புராணம் கூறும் தகவலைப் பார்ப்போம்.

முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயிணி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.

சிவ- பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை வேண்டும். எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால்தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, "நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், "எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகன்.

பேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன? அதனால்தான் மயில் வாகனமாக மாறி, பேரனைச் சுமந்தார் தாத்தாவான சூரபத்மன்.

சூரபத்மன் ஆணவத்தை அழிப்பதற் கென்றே அவதரித்தவர் முருகப் பெருமான். இந்த சிவமைந்தன் முற்பிறவி யில் பிரம்மதேவனின் மைந்தனாக- பிரம்மஞானி சனத்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார். ஒருசமயம் சூரர்களைப் போரிட்டு வதம் செய்வதுபோல் கனவு கண்டார்.

அதனை தன் தந்தையான பிரம்மாவிடம், ""தந்தையே! நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்'' என்று சொன்னார்.

அதற்கு அவர், ""சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம். அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்'' என்றார்.

முருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனும் பார்வதியும் சனத்குமாரரைக் காண வந்தார் கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன்முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார். அப்போது பரமசிவன், ""மகனே, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு சனத்குமாரர், ""நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்'' என்றார்.

சற்றும் கோபம் கொள்ளாத பரமசிவன், ""நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்'' என்றார்.

சனத்குமாரரும், ""உங்கள் விருப்பப்படியே உம் அருளால் மகனாகப் பிறப்பேன்'' என்றார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, ""உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாததுபோல் தெரிகிறதே'' என்றாள்.

""ஆம் அன்னையே. கர்ப்பவாசத்தில் தோன்றி, கீழ்முகமாகப் பிறப்பது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக் கும்படி செய்யுங்கள்'' என்றார். பார்வதியும், ""சரி; உன் விருப்பம்போல் நடக்கும்'' என்று ஆசீர் வதித்தாள்.

காலம் கடந்தது. பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகாவிஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த பார்வதி, பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள். அதுதான் சரவணப் பொய்கை என்று பெயர் பெற்றது.

மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில், பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இதுதான் தக்க சமயம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக தாமரை மலர்கள்மேல் படுத்திருந்தன. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார் கள். இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தைதான் ஆறுமுகம் கொண்ட சரவணன் என்ற முருகப் பெருமான். இவ்வாறாக சனத்குமாரர் முருகனாக அவதரித் தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வுகள் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. சஷ்டி திதி அன்று சூரசம் ஹார நிகழ்ச்சி திருச் செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது முருக பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத நியதிகள் உள்ளன.

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் பிரசாதத்தை உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மௌன விரதம் கடைப்பிடித்தால் மிகவும் சிறந்தது. மாலையில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகப் பெருமானை ஆவாகனம் செய்து பூஜித்தல் வேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்தல் சிறப்பாகும். இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங் காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது.

ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவுண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஆறு ஆண்டுகள் முறைப் படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

கந்தசஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியன்று விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; உடல் வளம் பெறும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்; சுபகாரியங்கள் நடக்கும்.

முருகன் திருத்தலங்களிலும் கோவில்களிலும் இந்த சஷ்டி விழா மிகவும் பிரமாதமாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

இதில் முதலிடத்தைப் பெறுவது திருச் செந்தூர். இங்குதான் மணப்பாடு என்னுமிடத்தில் சூரசம்ஹாரம் நடந்தது என்பர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள கடல், தன் அலைகளால் முருகப் பெருமானை வழிபடுவது போல் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குறுக்குத் துறை முருகன் கோவிலுக்குத் தனிச் சிறப் புகள் உண்டு. இங்கு முருகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக பாறையில் உருவாகியிருக்கிறார். திருச்செந்தூரில் பாறை யின்மீது முருகன் கோவில் உள்ளதைப்போல், குறுக்குத் துறை முருகன் கோவிலும் பாறையின் மேல் உள்ளது. மேலும் கோவிலின் கிழக்குப் பகுதியில் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இத்திருத்தலத்தை சின்ன திருச் செந்தூர் என்று சொல்வர். தவிர, இந்த மூலவர் சிலையிலிருந்துதான் கல் எடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவர் சிலை வடிக்கப்பட்டதாகவும் சொல்வர்.

ஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்குப்பின் தொடர்ந்து விரதம் கடைப்பிடிக்க இயலாத வர்கள் கந்தசஷ்டி திருநாளில் விரதம் கடைப் பிடித்து, அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் பேறுகள் பெற்று சுகமுடன் வாழலாம்.


ஆறுமுகன் அவதாரம்


வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றே என்ற உண்மையின் தத்துவத்தை விளக்குதலே இந்நாளின் சிறப்பாகும்.

ஆறுமுகன் அவதாரம்

“அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்ம
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் கூறுகிறது.

அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது.

சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என்று அருணகிரியார் பாடுவார். 

குழந்தைகளுக்கு பாதிப்பா? குணப்படுத்துவார் முருகப்பெருமான்


குழந்தைகளின் பால்ய வயதில் உண்டாகும் தோஷம் பாலாரிஷ்டம். ஜாதகத்தில் பாவகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்படும் போது இது ஏற்படும். இதனால் ஆயுள், ஆரோக்கியம் பாதிக்கும். சில வேளைகளில் தாய், தாய்மாமன், தந்தைக்கும் தோஷத்தை ஏற்படுத்தும். கிரகச்சேர்க்கை மற்றும் தன்மையைப் பொறுத்து பாதிப்பு அமையும். குருவின் பார்வை இருக்குமானால் இந்த தோஷத்தால் பாதிப்பு வராது.
இத்தோஷம் நீங்க, குழந்தையை முருகன் கோயிலில் சுவாமிக்குத் தத்து கொடுத்து வழிபடுவர். குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்து, சந்நிதியை மூன்றுமுறை வலம் வரவேண்டும். கொடிமரத்தின் முன்போ அல்லது சந்நிதி முன்போ குழந்தையை கிடத்தி, முருகனிடம் ஒப்படைப்பதாக எண்ணி வழிபடவேண்டும். பின், அர்ச்சகரை அழைத்து பிள்ளையைப் பெற வேண்டும். அக்காலத்தில் தட்சணையாக அர்ச்சகருக்கு ஒரு படி தவிட்டைக் கொடுப்பது வழக்கம். பிள்ளைக்கும் கூட "தவிடன்' என்று பெயர் வைப்பர். ஆனால், இப்பழக்கம் மறைந்து, தட்சணை கொடுக்கும் வழக்கம் வந்து விட்டது. இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகப்பெருமான் குழந்தையைக் காத்து அருள்புரிவான் என்பது ஐதீகம்

திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்


நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த 
 மிகவானி லிந்து வெயில்காய 
 மிதவாடை வந்து தழல்போல வொன்ற 
 வினைமாதர் தந்தம் வசைகூற

 குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
 கொடிதான துன்ப மயில் தீர 
 குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து 
 குறைதீர வந்து குறுகாயோ

 மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
 வழிபாடு தந்த மதியாளா 
 மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச 
 வடிவே லெறிந்த அதிதீரா

 அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
  மடியா ரிடைஞ்சல் களைவோனே 
  அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
  அலைவா யுகந்த பெருமாளே.


தை பூசம் விளக்கம்


நமது வள்ளல் பெருமான் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..

காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.

மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.

அகரம் + உகரம் + மகரம் = ஓம்

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்

இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.

அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி

  • சந்திரன் என்பது மன அறிவு,
  • சூரியன் என்பது ஜீவ அறிவு.
  • அக்னி என்பது ஆன்மா அறிவு.

சந்திரன் சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம்.

மனம் ஜீவனில் அடங்கி,ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்,என்பதை காட்டவே தை பூசம்

நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

மேலும் தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மை தத்துவமாக வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.

மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டன.


தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும்


பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன.

சித்தாந்தம். தெய்வம்.
1.) சைவம். சிவன்.
2.) வைணவம். விஸ்ணு.
3.) சாக்தம். சக்தி.
4.) சௌரம். சூரியன்.
5.) கணாபத்தியம். கணபதி.
6.) கௌமாரம். முருகன்.

இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் ஆகும். முருகக் கடவுளின் வழிபாட்டிற்கான விரத, திருவிழா நாட்களில் முக்கியமான ஒன்று தைப்பூசம் ஆகும். விழா என்றால் விழித்திருந்து செய்வது என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். இந்த நாட்களெல்லாம் சிறப்புமிக்க விழா நாட்களாகும்.

மாதம் நட்சத்திரம். 
1.) தை. பூசம்.
2.) மாசி. மகம்.
3.) பங்குனி. உத்தரம்.
4.) சித்திரை. சித்திரை.
5.) வைகாசி. விசாகம்.
6.) ஆனி. கேட்டை.
7.) ஆடி. உத்திராடம்.
8.) ஆவணி. அவிட்டம்.
9.) புரட்டாசி. பூரட்டாதி.
10.) ஐப்பசி. அசுவினி.
11.) கார்த்திகை. கார்த்திகை.
12.) மார்கழி. திருவாதிரை.

இதில் தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவரிற்கு செலுத்தி பூசிப்பது தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும். முருகப்பெருமானிற்கு கடியுண் கடவுள் என்றும் ஒரு பெயர் உள்ளத. புதியதை உண்பவர் என்று இதற்கு பொருளாகும். வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதிற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும் (இவற்றை பலியிடுவதற்கு அல்ல ,அர்ப்பணிப்பதற்கு மட்டும், அதாவது நேர்ந்து கோவிலில் விடுதல் என்பர்.) பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும். முருகனின் அறுபடை வீடுகளில் பழனியிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்டு செல்வது வழக்கமாகிவிட்டது.
அறுபடை விடுகளில் பழனியிலே மிகச் சிறப்பாக தைப்பூச விருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.சிவபெருமான் அன்னை உமாதேவியாருடன் கூடி ஞானசபையில் ஆனந்த நடனம் ஆடியதும் தைப்பூசத்திருநாளில்த்தான்
தில்லை மூவாயிரவர்க்கும், இரணியவர்மனிற்கும் நடராஜர் தரிசனம் தந்து அருள் பாலித்ததும் தைப்பூசத்திருநாளில்த்தான்
பழனி திருக்கோவிலின் சிறப்பு.

முருகன் தனக்கு ஞானப்பழம் கிடைக்காததால் தாய், தந்தையுடன் கோபித்துக் கொண்டு சென்று தனித்து நின்ற இடம் தான் பழனி. கையில் தண்டுடன் நின்ற காரணத்தினால் இங்கிருக்கும் மூலவரிற்கு தண்டாயுதபாணி என்று பெயர். (அதாவது தண்டை ஆயுதமாகக் கொண்டவர்) இங்கிருக்கும் மூலவர் விக்கிரகம் நவபாசாணத்தினாலானது.
பாசாணம் என்றால் கொடிய விசம் ஆகும். ஒன்பது வகை கொடிய விசப்பொருட்களின் விசத்தன்மையை சில அரிய மூலிகைச்சாறுகளின் மூலம் நீக்கி எந்த நோயையும் நீக்கும் அருமருந்தாக ஆக்கி அதனைக்கொண்டு போகர் என்ற சித்தரினால் செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதே பழனியிலுள்ள மூலவர் ஆகும். பழனி மூலவரிற்கு அபிசேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தத்தையுண்டால் எந்தப்பெரிய நோயானுலும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். பஞ்சாமிர்தம் - பஞ்ச அமிர்தம் அதாவது ஐந்து வகை அமிர்தம் ஆகும்.
இது அமிலத்தன்மையுடையது. அதாவது அரிக்கும் இயல்புடையது. இதன் மூலம் அபிசேகம் செய்யப்படும் போது மூலவரில் இருக்கும் நவபாசாண மருந்து பஞசாமிர்தத்தில்கலக்கிறது. அதனையுண்ணும் போது நோய்கள் குணமாகின்றன. பழனித்திருக்கோவிலின் பிரசாதம் இந்தச் சிறப்பு பஞசாமிர்தமாகும்.

இங்கிருக்கும் முருகன் துறவு நிலையில்யுள்ளவர். போகர் சித்தர்சமாதியானதும் இத்திருத்தலத்திலேயே.


கந்த சஷ்டி கவசம் விளக்கம்


கவசம் என்றால் நம்மைக் காப்பாற்ற்க் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காபாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.
இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு இரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கன்க வேல் காக்க.
அப்பப்பா எதனி விதமான் வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எத்தனை விதமான் பயத்திலிருந்து காக்க வேண்டும், பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார். அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவச்ம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் ச்ஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள் வேலனப் போற்றுங்கள்.

இடும்பாயுதனே இடும்பாபோற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக் சபைக்கு ஓர்
அரசேமயில் நடமிடுவோய் மலரடி
சரணம்சரணம், சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

முருகா என்றழைக்க


முருகா என்றழைக்க
ஆறு ஆதாரங்களும் அழகுறும்!

பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள் ஒன்றிணைந்ததே "முருகா' என்னும் திருநாமம்.

இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக விளங்குகிறது.

அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.

வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.

நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.

துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம்.

தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.

இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு திருக்கரங் களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார்.

நீலமயில் ஓங்கார சொரூபம். ஓங்காரமே பிரம்மம். அகர, உகர, மகார ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன். முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.

"சரவணபவ' என்னும் சடாக்ஷர மந்திரத்தை மனதில் நினைத்து, "குகாய நம ஓம்' என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத் தாலே மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு. முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.

திருப்பரங்குன்றம்- மூலாதாரம்.

திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம்.

பழனி- மணிபூரகம்.

சுவாமிமலை- அநாகதம்.

திருத்தணி- விசுத்தி.

பழமுதிர்சோலை- ஆக்ஞை.

"முருகா முருகா' என்று மனமுருகி வணங்கி னால், நிலையான இன்பம் அளித்து நம்மைக் காப்பான் வேலவன்.

முருகா சரணம்!

சொல்லச் சொல்ல இனிக்குதடா


முருகா!!! முருகா!!! சொல்லச் சொல்ல இனிக்குதடா!!!


செந்தமிழுலகில் கற்றோர் முதல் மற்றோர் வரை அனைவரும் எதற்கெடுத்தாலும், "முருகா! முருகா!' என்று சொல்லுவதைக் காண்கிறோம். தனிவழி நடந்தால் முருகா; தலை வலித்தால் முருகா; பாம்பைக் கண்டால் முருகா; பயங்கண்ட இடத்திலெல்லாம் முருகா என்கிறார்கள்.
விளையாடப் போகிற பையனும் விளையாட்டு வெற்றிக்காக முருகனை வேண்டிக் கொள்கிறான். வழக்கு வெல்ல- போர் வெல்ல- பேச்சுச் சிறக்க- காசுதிரட்டச் செல்கின்றவர்களும், செவ்வேள் திருவடித் துணையைப் பற்றியே செல்கின்றார்கள். "தனிவழிக்குத் துணை செங்கோடன் வடிவேலும் மயூரமுமே' என்று நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். நோயாலும், பேயாலும் நொந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பவன் முருகன்.
கலியுகம் என்பது தீமைகளுக்கு ஆக்கம் அளிக்கும் யுகம். உறுதியைக் குலைத்து, உண்மையை மறைத்து, தன்னறிவுக்கு மதிப்புக் கொடுத்து, பழமைகள் யாவும் கிழவர்களுக்கே உரியவை என்று ஒதுக்குங்காலம். இத்தகைய காலத்தில் இறையுணர்ச்சி குன்றா வண்ணம் எல்லாரிடத்தும் எல்லா வகையிலும் பாதுகாத்து வருபவன் முருகன்.
கடவுள் உணர்ச்சியில் கருத்தூன்றாதவனும் காவடி எடுத்து ஆடுகிறான். காவடியெடுத்தவர்களைக் கண்டால் கசிந்து கண்ணீர் சிந்துகிறான். உடலெல்லாம் வேல் குத்தி, நேர்த்தி செய்வதாகக் கூறி, நீங்காத பிணியிலிருந்து விடுதலை அடைகிறான்.
பழனி மலையில் முருகன் திருமுடியில் சாத்திய சந்தனம் குன்ம நோய்க்கு மருந்தாகிறது. வேளூரில் (வைத்தீசுவரன் கோயிலில்) சித்திராமிர்த தீர்த்தத்தில் வெல்லம் கரைத்தால், உடலிலுள்ள கட்டி கரைகிறது; மண் உருண்டை மருந்தாகிறது; சந்தனக் குழம்பு அமுதமாய் எல்லா இன்பங்களையும் கொடுக்கிறது.
செந்தூர்ப் பெருமான் முன்பு சென்றால் பிராரத்த கன்மங்கள் தம் வலி குன்றி, "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு' என்ற பழமொழிக்கிணங்க விலகுகின்றன. இவ்வண்ணம் முருகன் கலியுகத்திலும் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றான்.
வேளூர் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில், ""வேண்டிய வரங்கொடுப்பான் மெய்க்கண்ட தெய்வம் இத்தெய்வமல்லால் புவியில் வேறு இல்லை'' என்று குமரகுருபரர் கூறியருளுகிறார்.

சொல்லிலே இன்பம்:வாழைப்பழம் என்றவுடனே அழுகின்ற பிள்ளை வாய் மூடுகிறது; கற்கண்டு என்றால் களிப்புறுகிறது. அதுபோல முருகன் என்றவுடனே நமக்கெல்லாம் ஓர் இன்ப உணர்ச்சி எழுகிறது. இவ்வுணர்ச்சியை எழுப்பும் ஆற்றல் அச்சொல்லுக்கே இருக்கிறது. இந்நிலையில் அறிவுப் பொருளாய் இருக்கிற இறைவனாகிய முருகனை நேரிற்கண்டால் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கலாம்! முருகனைப் பார்த்தாலும், அவனது நாமத்தைக் கேட்டாலும், கட்டியணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கின்ற இனித்த சுவைக் கரும்பாக அவனை அனுபவித்தார்கள் நமது முன்னோர்கள். நமக்கும் அத்தகைய அனுபவம் வர வேண்டாமா?

இன்ப வடிவு :அன்புள்ள இடத்திலே இன்பம், உண்டு. இன்பமும், அன்பும் காரண காரியத் தொடர்புடையன. உலகில் காரணப் பொருள் காரிய அனுபவத்தில் கைவிடப்படுவதான வேற்றுமையுடையது. காரணம், காரியம் ஆகிய இரண்டுமாய் என்றும் இணைந்திருக்கும் பொருள் இறைவனே! நமது பெரியோர்கள் இந்த உண்மையை விளக்கவே இறைவனை "இன்பமே! என்னுடை அன்பே!' என்றும், "சோதியே! சுடரே! சூழொளி விளக்கே!' என்றும், "பூ வண்ணம் பூவின் மணம்போல' என்றும் இணைத்தே காட்டி, இறைவன் இன்ப அன்பு வடிவன் என்பதை அறிவுறுத்தியிருக்கிறார்கள். அன்பு ஒன்றே அவனை அடையும் நெறி என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
உலகத்திலே ஒவ்வொரு பொருளிடத்து ஒவ்வொரு நலம் இருக்கிறது. அது ஒவ்வொரு காலத்துத் தோன்றுகின்றது. வேனிற் காலத்து மாலைப் பொழுதிலே முல்லையும், மல்லிகையும் பூக்கின்றன. இளந்தென்றல் அவற்றின் மணத்தை அள்ளிக் கொண்டு வந்து நம்மேற் சொரிந்து இன்பூட்டுகிறது. கார்காலத்துக் கொன்றையும் நம் கண்ணிற்குக் களிப்பைத் தருகின்றது. முதுவேனிற் பருவத்திலே மாவும், பலாவும், வாழையும் ஆகிய முப்பழங்களும் தேனொழுகக் கனிந்து நாவிற்கு நலம் பயக்கின்றன.
இந்த நுகர்ச்சிகள் என்றும் எக்காலத்தும் உண்டாவதில்லை. இன்ப நுகர்ச்சிக்காகப் பிறந்த மனிதனோ, எல்லா நலங்களையும் எப்போதும் எய்த விரும்புகிறான். கிடைத்த நலம் மாறாமல் மடியாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது எதிர்நோக்கு. ஆனால் அவன் எண்ணப்படி மலர்ந்த மல்லிகை வாடாமல் இருக்குமா? கனிகள் அழுகாமல் இருக்குமா? தளிர்கள் பச்சென்றிருக்குமா? இல்லை; ஆதலால் "என்றும் எங்கும் நலம் குன்றாத பொருள் எது?' என்று நாடும் உள்ளம் அவனுக்கு உண்டாகிறது; அது இராப்பகலாக எங்கெங்கோ தேடுகிறது. தேடிக்கண்ட பொருள்கள், யாவும் நிறைந்தனவாக இல்லை. புறம்பே தேடிக்காணாத அவன், தனக்குள்ளேயும் தேடுகிறான். ஒரு பொருள் உள்ளும் புறம்பும் ஒத்து விளங்குவதை உயிராவணமிருந்து உற்று நோக்கிக் காண்கிறான். அப்பொருளிடத்தில் கண்ணிற்கு - காதிற்கு - மூக்கிற்கு - நாக்கிற்கு - உடலுக்கு - உள்ளத்திற்கு-உயிருக்கு நலம் பயக்கும் ஆற்றல் ஒரு சேர அமைந்திருக்கிறது. அது ஒரு இன்ப மலை; கற்கண்டுப் பதுமை; வெல்லப்பிள்ளையார். அத்தனைப் பண்பும் நிறைந்த அதனை மனிதன் அறிந்து அறிந்து அனுபவிக்கின்றான். அதுவே தானாய், ஏகனாய் இருக்கிறான். அனுபவ முதிர்ச்சி, அறிவதைப் பலகால் சொல்லியும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. முருகு, முருகன் என்ற பெயர்களைப் பரம்பொருளுக்கு அளிக்கிறான். சொல்லிச் சொல்லி இன்புறுகின்றான். இப்படி ஒரு நாமம் இல்லாத அப்பொருளுக்கு ஆயிரம் திருநாமங்கள் வந்தமைகின்றன.

முருகும்-முருகனும் :முருகு என்பது ஒரு பண்பு, உயர்ந்த பண்புகள் யாவும் முருகு என்ற ஒரு பொதுச் சொல்லால் வழங்கப்பெறும். முருகன் அப்பண்புகள் பலவற்றையும் உடைய பரம்பொருள். இறை தலைமை! அது பண்பு! அதனையுடையவன் இறைவன். இறையும் இறைவனும் ஒரு பொருளைத்தானே உணர்த்துகின்றன? அது போல முருகனே முருகு; முருகே முருகன்.சுருங்கக்கூறின், கண்ணுக்கு அழகாக, காதிற்கு நாதமாக, நாவிற்கு அமுதமாக, மூக்கிற்கு மணமாக, உடலிற்கு இனிய பரிசமாக, கருத்திற்கு விருந்தாக, உயிருக்கு உணர்வாக இப்படி எல்லாமாக இருப்பவன் முருகன்.
முருகு என்றவுடனே ""முருகமர் பூ முரண் கிடைக்கை'' ""மோட்டின் முல்லை மொய்மலர்க்கான முருகு வந்தெதிர்கொள நடந்தான்'' ""முருகு மெய்ப்பட்ட புலத்திபோல'' ""முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்'' ""படையோர்க்கு முருகயர'' ""முருகேர் பாணியும்'' ""முருகு பொறையுயிர்க்கும் மொய்பூங்காவில்'' ""முருகு வாய்மடுத்துண்டளிமூசும்'' முதலான இலக்கிய முருகுகள் நம்முன்னே வந்து மணம், தெய்வத்தன்மை வெறிக்கூத்து, வேள்வி விழா, தேன் முதலிய பண்புகளையும் பண்பையுடைய பொருள்களையும் நினைவூட்டி நிற்கும்.
இவையன்றித் திவாகரம், பிங்கலந்தை, நாமதீப நிகண்டு முதலியவைகளைப் புரட்டினால் அழகு, பூந்தட்டு, கள், எலுமிச்சை, எழுச்சி, அகில், முருகு என்னும் வாத்தியம் என்ற பொருளும் காணப்படும். இவ்வண்ணம் பலபொருள்களை உணர்த்தும் ஆற்றல் முருகு என்ற ஒரு சொல்லுக்கு உளதாதல் போல, அழகு முதலிய பண்புகளனைத்தையும் ஒரு சேரத்தாங்கி எப்பொழுதும் மக்கள் மனத்தைப் பிணித்து, சாவா மூவாப் பேரின்ப வடிவாய் நிற்பதொரு பேரருட்சக்தி இருப்பது நன்கு புலனாகும். அப்பொருளே முருகன்.

முருகன் துதி


ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!



பாடுங்க... பாடுங்க...


கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் விரத காலத்தில் பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகையில்
முருகப் பெருமானைப் பற்றிய எளிய துதிப்பாடல்களைத் தந்துள்ளோம்.

ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார் வினைகள் தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகத் தெய்வம்
வேறுபடை தேவையற்ற வேலவனாம் தெய்வம்
யாருமற்ற அடியவரை ஆட்கொள்ளும் தெய்வம்
கூறும் வேதத்து உட்பொருளாய் குளிர்ந்து
நின்ற தெய்வம்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.

ஆடும் பரிவேல் அணிசேவல் என
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என்மீது மனமகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள்செய்.

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே- ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே! "செந்திநகர்ச்
சேவகா' என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை.

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்
என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்
விரித்தோனைவிளங்கு வள்ளிகாந்தனைக்
கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!

விழிக்குத் துணை மென்மலர்ப் பாதங்கள்
மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா
என்னும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

சிந்தாமணியே திருமால் மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகநோக்கி வரம்
தந்தாய் முருகா தணிகா சலனே.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்


சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும்மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும்விழுமிய துணையாக அமைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான். ஆவனது திருவருள் எங்கணும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடுமலைசோலைஅரங்கம் எங்கணும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்குச் சான்று. மக்களுக்கு உயித்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான்,அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புதத் தெய்வம். ஆடியார்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும்ஒற்றுமைத் தெய்வம் வள்ளி தெய்வயானை சமேதராய் விளங்கும் அழகுத் தெய்வம். இத்தகைய சிறப்பினால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அடியார்களை உள்ளன்புடன் முரகனைத் தரிசித்து விழிபடும் வண்ணம் ஆற்றப்படுத்துகின்றார். முத்தமிழால் வைதாரையும் விழ வைப்பவனாகிய முருகன் யாவும் நிறைவு பெற்ற பூரணப் பொருள்;.
உபநிடத வாக்கியம் பூரணத்தின் சிறப்பைக் கூறும் ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்;ணாத் பூர்ணமுதச்யதே என்ற உபநிடதச் சிந்தனையின் படி பூர்ணமாகிய பொருளிலிருந்து பூர்;ணம் உதயமாகியுள்ளது என்பது விளக்கப்படுகின்றது. பூர்ணமாகிய சிவப்பரம்பொருளிடமிருந்து பூருணமாகிய முருகப்பெருமான் உதமாகியுள்ளான் என்றும் கொள்வதில் தவறில்லை. புதியரில் புதியவனாகவும் முடிவிற்கு முடிவானவனாகவும் விளங்கும் முருகன் நினைத்தவுடன் அடியார்களுக்கு அருள்பாலிப்பவன்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
நெஞ்சமதில் அஞ்சலென வேல்தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என் றோதுவார் முன்
ஏன்ற பாடல் முருகனது திருவருட் சிறப்பைக் கூறும். முருகனுக்குள்ள எண்ணற்ற திருநாமங்கள் அவனது தெய்வீகப் பெருமைகளை எமக்கு உணர்த்துகின்றன. அவனுக்குரிய திருநாமங்களில் செவ்வேள் என்பது குறிப்பிடத்தக்கது. முரகனது திருவுருவினைச் செந்நிறமாகவே கண்டனர். காலைப்பொழுதிற் கண்ணிற்கு இனியதாய்க் கீழ்த் திசையிற் றோன்றும் இளஞாயிறு செவ்வொளிப் பிழம்பாய்த் தோன்றும் தன்மையைக் கண்டு மகிழ்ந்த மாதர் அவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் முருகப்பெருமானையும் செவ்வேள் சேஎய் என அழைத்தனர். கந்தபுராணத்தில் கச்சியப்பர் முருகனது தோற்றத்தினைக் பற்றிக் குறிப்பிடுமிடத்து.
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனி ஆகக்
குருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஓரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
என்ற பாடல் தரும் கருத்தின் பொருத்தப்பாட்டினையும் இங்கு உவந்து நயக்க முடிகின்றது.
முருகனது வழிபாடு நிகழும் ஆலயங்கள் தென்னாட்டிலும் ஈழத்திலும் பெருமளவில் உள்ளன. முரகனது திருகரத்தில் விளங்கும் ஞானவேல் முருகவழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றது. வேல் என்பது முருகனது ஞானசக்தி முருகப் பெருமானின் துணையை அவனது வேலின் வழிபாட்டால் அடியவர்கள் பெறுவர்.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீருவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்ப்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை
ஏன்ற நக்கீரரின் பாடல் வேலின் சிறப்பினைக் கூறும். ஞானமாகிய அறிவுக்கு மூன்று பண்புகள் உண்டு. அவை ஆழம்அகலம்கூர்மை என்பன வேலின் அடிப்படைப்பகுதி. ஆழ்ந்தும் இடைப்பகுதி அகன்றும்நுனிப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். பரம்பொருளின் தத்துவத்தை மணிவாசகர் வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே எனப் போற்றுகின்றார். இவ்வேலின் தத்துவம் அப்பரம்பொருள் தத்துவத்தை எமக்கு உணர்த்துகின்றது. முரகனது திருக்கைவேல் வழிபாட்டினால் ஆணவத்தையும்,தீவினையையும் அழிக்கலாம். அருணகிரிநாதர் வேல்வகுப்பு என்ற தனிப்பாடலினால் இந்த ஞானசக்தியைச் சிறப்பாகப் புகழ்ந்துள்ளார். முருகனது திருவுருவ வழிபாட்டுக்கு நிகராக அவனது திருக்கையில் விளங்கும் ஞானவேலினை வைத்து வழிபடும் மரபு பண்டைக்காலம் முதல் இருந்து வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் வேற்கோட்டம் என்ற குறிப்பு வேலை முருகனாக வழிபடும் மரபைக் கூறுகின்றது.
உலகில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி சைவத் தமிழ்க் குடிநாகரீகத்திலும்பண்பாட்டிலும் ஒழுக்க நெறியிலும் தலை சிறந்தவர்களாக சைவத் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். புராதன காலம் தொட்டே கடவுள் வழிபாடும்சமய சடங்குகளும்விரதங்களும் அவர்கள் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து ஒன்றியுள்ளன.
மனிதனாகப் பிறந்தால் மட்டும் போதாதுபண்பாட்டோடு ஆசார அனுட்ஷானங்களோடு வாழ வேண்டும். அதற்கு வழிவகுப்பது விரதங்களும்,விழாக்களும் ஆகும்.யக்ஞம்தபஸ்,முதலிய கர்மங்களை செய்ய முடியாதவர்களுக்கென்றே விழாக்களும்விரதங்களும் ஏற்பட்டன. தீய சக்திகள்தீய குணங்கள் ஓழி படவும்அமைதிமனத்தூய்மைதெய்வ வழிபாடு,மன ஒருமைமக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படவே விரதங்கள்விழாக்கள்,பண்டிகைகள் கைக் கொள்ளப்பட்டன. மரணம் என்றால் என்னஸ்ரீ பகவத் விஸ் மரணமேவ மரணம் அதாவது பகவானை மறப்பதே மரணம் ஆகவே தான் ஏந்நேரமும் பகவானை நினைக்க வேண்டும் என்பதற்கு விரதங்களும்,விழாக்களும் வழிவகுக்கின்றன.
மனம்மொழிமெய் மூன்றையும் கட்டுப்படுத்தி ஒருங்கு சேரச் செய்து இறை சிந்தனையை வளர்த்து இறைவன் அருகே எம்மை அழைத்துச் செல்பவை விரதங்கள் தமது வாழ்க்கையில் விரதங்களும்பண்டிகைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அவ்விரதங்கள் பண்டிகைகள் பற்றி முறையாகத் தெரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. இவை பற்றிய விபரங்களை அறிய ஆர்வமிருந்தும்எங்ஙனம்எங்கிருந்து அறியலாம் எனத் தெரியாது. தவிப்போர் பலர்விரத கதைகள் அநுஷ்டான முறைகள் நோக்கங்கள் முதலியன விபரங்களைக் கூறும் நூல்கள் இன்று கிடைப்பது அரிது.
விஞ்ஞான முறைப்படி பார்த்தாலும் குடும்ப நலம்உடல் நலம்பரம்பரை விசுவாசம்தன்னம்பிக்கைதுணிவுபணிவு பக்தி ஆகியவற்றை அதிகமாக்கி வாழ்வில் ஒழுக்கத்தையும் நேர்மையையும்இவை அதிகமாக்குகின்றன.
ஒவ்வொரு விரதமும்ஒவ்வொரு கோணத்தில் ஆயுள் விருத்தியையும்மனித உடல் நலத்தையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.
எல்லோராலும் எல்லா விரதங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாவிடினும்,ஏற்றுக் கொண்டு பின்பற்றும் விரதங்கள் எப்படிச் செயலாற்ற வேண்டும். அதனால் ஏற்படும் தெய்வ நன்மைகள் என்ன அதனால் ஏற்படும் விஞ்ஞான நன்மைகள் என்பன என்பதையெல்லாம் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் மாருகக்குருட்டாம் போக்கில் பின்பற்றக் கூடாது. இன்றைய இளைய சமூதாயம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் விடை பகரக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
விரதங்களை மேற்கொள்வதால் தெய்வ நம்பிக்கை அதிகமாகிறது. ஓழுக்கமும் கட்டுப்பாடுகளும் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியம் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது பிரச்சினைகள் குறைகின்றன. தனிமனிதன் நன்மை பெறுவதனால் அவன் குடும்பம் நன்மை பெறுகிறது. இரக்க சிந்தனை,தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விஞ்ஞான முறைப்படியோஅஞ்ஞான முறைப்படியோ இருள்ஞான முறைப்படியோ ஆராய்ந்தாலும் விரதங்கள் நமக்கு ஒரு போதும் விரோதமான நிலைமைகளைத் தரவில்லை என்பது மட்டும் உறுதி
விரதமென்றால் சங்கல்ப்பத்துடனும்உபவாச நியமங்களுடனும் கூடச் செய்யும் சத்கர்மா என்று பொருள் உபநயனத்தில் பிரம்மசாரிக்கு வேதமே விரதத்தைக் கூறுகிறது. ஸமாவர்த்த காலத்தில் வேதவிரதம் விதிக்கப்பட்டிருக்கிறது. யஞ்ஞத்தில் ஈடுபட்டவருக்கு சில விரதமுண்டு. இவை வேத விரதமாகும். நாம் ஆண்டு தூறும் அனுஷ்டிப்பது புராணவிரதமாகும். பண்டிகை என்;றால் அதிக நியமமின்றி உற்சவமாகச் செய்வதாம். வுpநாயக சதுர்த்தி முருகனின் தைப்பூசத் திருவிழா உற்சவமாகும். சங்கராந்தி (பொங்கல்) போன்ற சில பண்டிகைகளில் சூர்ய பூசைதர்ப்பணம்முதலிய சில விரத நியமங்கள் உண்டு.
அவசியம் செய்தே ஆகவேண்டும்மென்பது நித்யவிரதமாம். ஓரு பலனை நாடிச் செய்வது காம்ய விரதமாகும். சில நித்யமும் காமியமுமாகும். காம்யமென்றால் இத்தனை முறை விடாமல் செய்து உத்தியாயனமும் செய்ய வேண்டும்.
விரதங்களுள் சில நித்திய விரதங்கள் என்றும் வேறு சில காமிய விரதங்கள் என்றும் சொல்லப்படும். சில தேவைகளை முன்னிட்டு இறைவனிடம் நமது வேண்டுதல்களை முன்வைத்துக் குறிப்பிட்ட காலத்துக்கு அநுஷ்டித்து அதன் பின் உத்தியாபனம் செய்யப்படுவவை காமிய விரதங்கள் அவ்வாறு அல்லாமல் எதுவித பலன்களையும் எதிர்பாராமல் அமாவாசை பூரணை (பறுவம்) முதலிய விரதங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தல் நித்திய விரதங்களாகும்.
தாய் தந்தையர் இறந்த திதிகளாக ஆண்டுதோறும் வரும் அமாவாசை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் மாயை சிரார்த்த தினவிரதம்சித்திரைஐப்பசி மாதப் பிறப்புகளான விஷப புண்ணிய கால விரதங்கள் ஆடிதை மாதப் பிறப்புக்களான அயன புண்ணிய கால விரதங்கள் என்பன பிதிரர் விரதங்களுள் சிறந்தவை.இவை கால எல்லை கருதாமல் அறிவு உள்ள வரை கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களாகும்.
பொதுமக்கள் பெரிதும் காமிய விரதங்களை விரும்பி அனுஷ்டிக்கின்றனரெனினும் உரிய முறைப்படி சரியான விதி முறைகளை அறிந்து கைக்கொள்வோர் மிகச் சிலரே.
இன்னஇன்ன விரதங்கள் இன்ன இன்ன நோக்கத்துக்காக அநுஷ்டிக்கப்பட வேண்டும் இத்தனை வருடங்கள் கைக் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு கைக்கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. அவற்றை அறிந்து முறையாகக் கைக்கொள்வது அவசியமாகும்.
ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காகக்கைக் கொள்ளவேண்டும்.
உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதி மையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்;வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து 0வேட்டிசால்வைஅரிசிகாய்கறிதாம்பூலதஷிணைகள் பூசைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் தம்பதிபூசைசுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து விடடுப் பாரணை பண்ண வேண்டும் பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி.
இங்கு குறிப்பிட்ட விதத்தில் வீட்டிலே பூசைகளைச் செய்வதும் பொன் பிரதிமைகளைச் செய்து தானம் கொடுப்பதும் யாவருக்கும் எளிதானதன்று இதனால் உத்தியாயனமே செய்யாது விடுவதும் முறையன்று எனவே உரிய காலத்தில் ஆலயம் சென்று விரத உத்தியாபனம் செய்யப் போகின்றேன் என்று குருமுகமாகச் சங்கல்பம் செய்து இயன்ற வகையில் விசேஷ அபிஷேகம் பூசை அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து குருவுக்கு தாம்பூல தட்சணைகளும்தானங்களும் இயன்றவரையும் வழங்கி விரதத்தை மனநிறைவோடு முடித்து இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும்நம்பிக்கைகளின் அடிப்படையில்அவர்களது வாழ்வில் வளமும்நலமும்மிகுவதற்கு பயன்படுகின்றன.
எல்லா விரதங்களுக்கும் பொதுவான விதிமுறைகள் யாவை என நாம் பார்ப்போமானால் அதிகாலையில் துயிலெழுந்தல்நீராடித் தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிதல்சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மாநுஷ்டானங்களை (அநுட்டானம் பார்த்தல்) முறைப்படி செய்தல்,ஆலய வழிபாடு செய்தல்காலைமாலை வீட்டில் சுவாமி அறையில் விளக்கேற்றி வழிபட்டு இயன்றவரை திருமுறைப்பாடல்கள் மற்றும் தோத்திரப்பாடல்களைப் பாடுதல்விபூதிஉருத்திராக்கம் முதலிய சமய சின்னங்களை அணிந்திருத்தல்காலை உணவினை நீக்கி மதியம் ஒரு வேளை மட்டும் இன்னமும்இரவில் பால் பழமும்அல்லது பலகாரம் உண்ணல் என்பன எல்லாவிரதங்களுக்குமே முக்கியமாக வேண்டப்படும் கட்டுப்பாடுகளாகும். விரதம் இருக்கும் பெண்கள்அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும். வீடு வாசல்களைக் கழுவி சுத்தப்படு;த்த வேண்டும். இவ்விதம் விரதோத்தியாபனம் செய்பவர்களுக்காகவும்சாதாரணமாக பாரணை சமயத்தில் ஆலய தரிசனம் செய்வதற்காக வருபவர்களுக்காகவும்உபவாசவிரதங்களுக்கு மறுநாள் காலையில் ஆலயங்களில் நிகழும் விஷேஷ பாரணைப் பூசையை அதிகாலையிலேயே நிறைவேற்றி விரதம் அநுஷ்டிப்போர் எட்டரை மணிக்கு முன் தமது பாரணையை முடித்துக் கொள்ளும் வகையில் ஆலய நிர்வாகிகளும்குருமாரும் முன்வர வேண்டும்.
உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.
சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியான போது சாப்பிடலாம்.
ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசிதீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.
பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டுஇச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.
சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.
விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.

இவ்விரதங்களை அனுஷ்டிக்கத் தகுதியானவர்கள் யார் தகுதியற்றோர் யார்?என்றொரு கேள்வி எழுகிறது. சுத்த போசனமுடையோராயும் தீட்சை பெற்றவர்களாகவும்ஆசார சீலர்களாகவும் இருப்பவர்களே விரதங்களைக் கைக்கொள்ளத் தகுதி உடையோர் என்று விரத நூல்கள் எடுத்துரைக்கின்றன.
நோயாளர்களும்ஆசௌகரியமுடையோரும் பாலகர்களும்மாதவிலக்கான பெண்களும் விரதம் அனுட்டிக்கும் தகமை இல்லாதவர்கள் இவர்கள் விரதம் கைக்கொள்ள வேண்டுமாயின் தமக்காக வேறு ஒருவரை வரித்துக் கொள்ளவேண்டும். பெண்கள் தம் கணவரை அல்லது மகனை வரித்துக் கொள்ளலாம். நோயாளர் பிள்ளைகளை அல்லது குருமாரைக் கொண்டு விரதத்தை நோற்றலாம். பாலகர்களுக்காகப் பெற்றோர் நோற்றலாம். ஆசார மில்லாதோர் அல்லது அசௌகரியமுடையோரும் குருமாரை வரித்துக் கொள்ளலாம்.
சமையல் பாத்திரங்கள் விரதத்திற்கு எனத் தனியாகப் புதிதாகக் கழுவி சுத்தமாக ஏற்கனவே சமைத்ததாகவோஅசைவ உணவுகளைச் சமைத்த பாத்திரங்களாகவோ இருக்கக் கூடாது. முதல் நாள் சமைத்த உணவுகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல்பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல்பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல்பிறரிடம் பேசாதிருத்தல்,அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.
விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது. ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது. நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது எண்ணங்களை சிந்தனையைச் செலுத்த வேண்டும்.
விரதம் இருப்போர் தாம்பத்திய உறவில் ஈடுபடுதல்தவறான உணர்ச்சிகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தல்கேட்டல் கூடாது விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல்பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல்புகைப்பிடித்தல்மது அருந்துதல்,சூதாடுதல் ஆகியவையும் கூடாது.
விரத நிபந்தனைகளை முழுமனதோடு ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். விரதங்களுக்கு தகுந்தபடி ஒருவேளைஇரண்டு வேளை மூன்று வேளையும் உபவாசம் இருத்தல் ஆகிய எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
விரத பூசையின் போது ஒவ்வொரு முறையும் விநாயகருக்கு பூசை செய்த பிறகே விரதத்திற்கான தெய்வங்களுக்கு பூசை செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட விரதங்களில் குறிப்பிட்ட முறைப்படியே ப+சை விதிகளையும்,அனுட்டான முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். விதியில் குறிப்பிட்ட மலர்களே அத்தெய்வங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாற்று மலர்கள் பயன்படுத்தக் கூடாது. இது விரதங்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் என்பது முன்னோர் நம்பிக்கை
விரதங்கள் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும்மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும். பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனைத் தரா.
விரத சம்ஹிதை என்னும் நூல் நோயாளிகள் மிகவும் வயதானவர்கள்,குழந்தைகள் இப்படி உள்ளவர்கள் விரதம் பூசைகளில் கலந்து கொண்டால் போதும் என்கிறது. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி எழு தினங்கள் ஆன பிறகே விரதம் மேற்கொள்ளலாம்.
மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்கும் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் அனுஷ்டிக்கலாம்.குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால் அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இவை விரத அனுஷ்டானங்களுக்கான பொது விதிகளாகும். இவற்றோடு சம்பிரதாய பூர்வமாக தமது பிரதேசங்களில் நிகழும் நடைமுறைகளையும்,குருமூலமாக உபதேசிக்கப்பட்டவற்றையும் சேர்த்து முழுமனதான விரதங்கள் நம்பிக்கையோடு அனுசரிப்பதே முறையாகும்.
விரதம் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவற்றை மனத்தில் உறுதியாகக் கொள்ளுவதையே விரதம் என்பார்கள். இவ்விதம் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றபோது எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்பதனை சாஸ்திரங்கள் தெளிவு படக்கூறுகின்றன. இவற்றை நாம் முறைப்படி கைக்கொண்டால் விரதஅனுட்டான பயனைப் பெற்றக்கொள்ளலாம்.
முருகப் பெருமானை ஆராதிக்கும் மூன்று முத்தான விரதங்கள் விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம் ஒன்றும், (சுக்கிரவாரம் அல்லது வெள்ளிக்கிழமை விரதம் ) திதி விரதம் ஒன்றும் (கந்தசஷ்டி விரதம்), (நட்சத்திர விரதம் - கார்த்திகை விரதம்)என அவை அமைகின்றன.
முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவதற்குரிய விரதங்களை சிறப்பாக ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம்பரம்வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான்.
இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேள். பால் பாயசத்தை ஒரு கரண்டியைக் கொண்டு தானே படைக்கின்றோம். அது போல் இக நலனை வள்ளி தேவியைக் கொண்டும்பரநலனை தெய்வயானை அம்மையைக் கொண்டும்முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான் முருகன். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபடுவோர் இகம்பரம்வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று செம்மையுறுவார்கள். பாவம் நிறைந்த கலையில் கண்கண்ட தெய்வமாகக் கலியுகவரதனாக விளங்குபவர் கந்தவேள்முருகனை ஞானிகள் தமது ஞான வழியால் கண்டார்கள். அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் கோலக்குமரன் கொலுவீற்றிருப்பதாகக் கொண்டு ஆங்காங்கு அவனுக்கு விழாவெடுத்து வழிபடுகின்றோம்.
அழகுக் கடவுளாக உறையும்முருகனை தமிழ்க் கடவுளாக நாம் கொண்டோம்முத்தமிழால் வைதாரையும்வாழவைப்பான் முருகன் என்பர் அருணகிரியார். அத்தகைய பெருமையும்அருளும் நிறைந்த முருகனுக்குரிய விரதங்கள் விழாக்கள் பற்றிச் சிறப்பாக நோக்குவோம்.
சுக்கிரவார விரதம்
சுப்பிரமணியக் கடவுளை வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கைக் கொள்ளப்படும் இந்த விரதம் ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கப்படும்.
உபவாசமிருத்தல் உத்தமம். அது இயலாதவர்கள் பால் பழமாவது பலகாரமாவது இரவு ஒரு நேரம் கொள்ளலாம். அதுவும் முடியாவதர்கள் பகல் ஒரு பொழுது போசனம் செய்க. மூன்று வருட காலம் அநுஷ்டித்த பின் விரத உத்யாபனம் செய்யலாம்.
கார்த்திகை விரதம்
கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம்உத்தமம்இயலாதோர் இரவில் பால்பழம்பலகாரம் உண்ணலாம்.அதுவுமியலாதோர் பகலொருபொழுது போசனம் செய்கபன்னிரண்டு வருடங்கள் இவ்விரதமநுஷ்டித்த பின் உத்யாபனம் செய்யலாம். திருக்கார்த்திகை விரதத்துக்கு இஸ்தமன வியாபகம் முக்கியம். அதாவது மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும்.
திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து சோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது.
திருவண்ணாமலைத் தலத்திலே மலையுச்சியிலே பெருந்தீபம் ஏற்றப்படுகின்றது. பல ஊர்களிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இறைவனது சோதி வடிவைத் தரிசிப்பார்கள் குன்றின் மேலிட்ட தீபம் என்பதும் மலை விளக்கு ஆகிய மரபுச் சொற்றொடர்கள் நீண்ட காலம் இவ்வழக்கு இருந்ததைக் காட்டுகின்றன.

"
மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கி
செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்"
என்று தொல்காப்பியம் புறத்திணை 85 இல் வருவதும்.

"
முடநடைப் பறவையு மாய விலங்கு
முடிமலர் முடிக்காடவைமுறை போகா’’
என்று சங்க புலவர் பொய்கையார் கூறுவதும்

"
வானம் ஊர்ந்த வளங்கொளி மண்டிலம்
நெருப்பெனச்சிவந்த உருப்பு அவிர் அம்கட்டு’’
என்னும் ஒளவையார் கூற்றும் (அகநாநூறு) ம் கூறுகின்றன.
திருக்கார்த்திகை தினத்தில் ஆலயங்கள் தோறும் சொக்கப்பானை கொழுத்தி மகிழ்வர். சொக்கப்பானை பற்றி சைவசமய புண்ணியகாலம் என்ற தமது நூலில் த. சுப்பிரமணியர் அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
சுட்டப்பனை என்னும் சொற்றொடர் திரிந்து சொக்கப்பானை என வழங்குகிறது. சுட்கம் என்பது வரட்சிஉலர்ந்த தென்னைபனைகமுகுவாழை இவற்றின் தண்டினைத் தீபதண்டமாகக் கோயில் சந்நிதானத்திலே நட்டு உலர்ந்த பனையோலை முதலியவற்றால் விமானம் போல உயரமாக மூடிக்கட்டிய சொக்கப்பானையில் அக்கினி மூட்டி அது சுவாலித் தெரியும் போது சோதி சொரூபமாகவும்திருவண்ணாமலைத் தீபமாகவும் பாவித்து பக்தர் வழிபடுவர்.இந்தச் சொக்கப்பானையின் நடுவே வாழைக் குற்றியொன்றை நட்டு அருகில் மாவிளக்குத் தீபம் ஒன்றையும் வைத்து சொக்கப்பானை எரித்து முடிந்த பின் அதனை எடுத்து நிவேதிப்பர். முருகன் ஆலயங்களில் அடியார்கள் பலரும் மாவிளக்கு இட்டு வழிபடுவர்.
செந்தினை மாவுடன் (கிடைக்காதவர்கள் அரிசிமாவில் செய்வர்) தேனையும்,நன்கு கனிந்த வாழைப்பழத்தையும்சக்கரையையும் சேர்த்துப் பிசைந்து அம்மாவினால் ஒன்றுமூன்று,ஐந்து ஏழு என ஒற்றைப்படை இலக்கத்pல் அகல் விளக்கு வடிவத்தில் செய்து நெய்விட்டுத் திரியும் இட்டுத் தீபமாக ஏற்றுவர். இதனையே மாவிளக்கு என்பர்.
திருக்கார்த்திகை பற்றியும் சொக்கப்பானை பற்றியும் மாந்திரீக பூசணம்
சிவஸ்ரீ க. சாம்பசிவக்குருக்கள் அவர்கள் சோதிடமலர் பத்திரிகையில் (1978கார்த்திகை) எழுதிய கருத்து இது.
இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினமாகக் கார்த்திகை நட்சத்திரமாகும்.. இறைவனின் புன்னகையே அக்கினியாகத் தோன்றித் திரிபுரங்களை எரித்த பாவனையைக் காட்டவே தீபோத்சவம் என்ற உற்சவம் நடத்தப்படுகிறது. கருங்காலிதென்னைபனைவாழை முதலியவற்றிலொரு மரத்தைத் தீபஸ்தம்பத்தின் பொருட்டு முதல் 25 முழம் வரை உயரமுள்ளதாக எடுத்துப் பூமியுள் எட்டிலொருபங்கு புதைத்து அதைச் சுற்றிப் பனை ஓலைதென்னை ஓலைகமுகோலை இவற்றினால் கூடுகட்டித் தெற்கு அல்லது கிழக்குப் பக்கமாக வாசல் விட்டு அதில் தீபம் வைத்துக் கொழுத்த வேண்டும். இதை நம்நாட்டில் சொக்கப்பானை என அழைக்கின்றனர்.
திருக்கார்த்திகை நாள் குமராலயதீபம் எனப்படும். முருகன் ஆலயங்களில் மேற்கண்டவாறு வழிபாடுகள் நிகழும் முதல் நாள் அல்லது மற்றநாள் அல்லது அதே தினத்தில் பௌர்ணமி தினத்தில் ஏனைய எல்லா ஆலயங்களிலும்வீடுகளிலும் சர்வாரய தீபம் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது.
வீடுகளில் மாக்கோலங்களையும்வண்ணக்கோலங்களையும் இட்டு அவற்றின் மீது அகல்விளக்குகளை ஏற்றிவைப்பர். சிறுசிறு பந்தங்களைத் தயார் செய்து அவற்றைத் தேங்காயெண்ணெய் அல்லது இலுப்பெண்ணெய் விட்டு ஏற்றி வீட்டுவளவிலும்வயல்தோட்டம் முதலிய இடங்களிலும் நாட்டி வைத்து எரிய விடுவர். வீட்டு வாசலில் வாழைக்குற்றியை நாட்டி அதன் மேல் தேங்காய்ப் பாதியை வைத்து அதனுள் திரிச்சீலை இட்டு எண்ணெய் விட்டு நீண்டநேரம் எரியச் செய்வர். நமிநந்தியடிகள்,கலியநாயனார்கணம்புல்லநாயனார் ஆகியோர் திருவிளக்குத் தொண்டினால் முத்தி பெற்றோராவர்.
இவ்வாறு புறஇருள்களைந்து ஒளி சேர்க்கும் இந்தத் தீபோற்சவ நாளில் அக இருள் போக்கி ஞான ஒளி சேர்ப்பதும் நிகழ வேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும்.

"
நிலைதரும் கார்த்திகைத் தினத்து நெல்லியின்
இலைகொடு குகனடிக் கிறைத்து ளோரெலாஞ்’’
என திருச் செந்தூர்ப்புராணம் 11- 36 கூறுகின்றது.
கலியுகவரதனும்தமிழ்க் கடவுளுமாகிய கந்தக்கடவுளாம் சுப்பிரமணிய சுவாமிக்குரிய மூன்று விரதங்களில் மிகச் சிறந்தது ஸ்கந்தஷஷ்டி விரதம்,சைவசமயிகள்முக்கியமாகக் கந்தபுராண கலாசாரத்தில் திழைக்கும் ஈழத்துச் சைவத் தமிழ் மக்கள் மற்றெல்லா விரதங்களையும் விட இந்த ஸ்கந்தஷஷ்டி விரதத்தை மிகவும் புனிதமாகவும் பக்தி பூர்வமாகவும் கைக்கொள்ளுகிறார்கள்.
ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையையடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டியீறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்தஷ்டி விரதமாகும். சகல செல்வங்களையும்சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமாகும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது ஒரு பழமொழி. இதற்கு வெளிப்படையான சொற்பொருளை விட ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையாகிய கருப்பையில் கரு உண்டாகும் என்ற உட்கருத்துமுண்டு. பகல் பன்னிரண்டு நாழிகைக்குக் குறையாமல் பஞ்சமித்திதியும் அதன் பின் ஷஷ்டி வியாபகமும் இருக்கும் நாள் சூரன் போருக்குரியது. பிரதமைத்திதியில் ஆரம்பமாகும்.
முருகபக்தர்கள் ஒரு கடுந்தவமாகவே இவ்விரதத்தைக் கருதி ஆறு நாட்களும் முழுப்பட்டினியாக உபவாசதிருத்தல் வழக்கம். முதல் நாள் அமாவாசையன்றே ஒரு நேர உணவுண்டு விரதமாக இருந்து மறுநாளைய உபவாசத்துக்குத் தயார் செய்து கொள்வர் (பொதுவாகவே உபவாசத்துக்குத் தயார் செய்து கொள்வர் (பொதுவாகவே உபவாச விரதமநுஷ்டிக்கும் போது முதல் நாளும் மறுநாளும் ஒரு நேர உணவே கொள்ள வேண்டும்.
பிரதமையிலன்று அதிகாலை நீராடித் தூய ஆடையணிந்து கர்மாநுஷ்டானங்கள் முடித்து முருகன் ஆலயம் சென்று அங்கேயே ஆறு நாட்களும் அன்ன ஆகாரங்கள் எதுவுமின்றி இறைவழிபாடுமுருகநாம்பஜனை,நாமஐபம்.புராணபடனம்புராணம் கேட்டல் என்றித்தகைய புனித காரியங்களுடன் அங்கேயே தங்கியிருப்பர். தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரைதேசிக்காய்இளநீர்,முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும். பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம்வாய்வுபித்தம்,இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும்பசிதாகம்,இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.
ஆலயங்களில் ஆரம்பதினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டிசங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறைஇறுதி நாளில் கர்ப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.
ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் ப+ஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூசை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு ) பாரணை செய்ய வேண்டும்.
இவ்விதம் கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.
ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் துயில் நீக்கி விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும்,வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்;திரியும்மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.
இவ்விரதம் ஆறு வருடங்கள் அல்லது பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும். உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து ஆறாவது வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
விரதோயாபனத்தின் போது முருகன் ஆலயம் சென்று விரத பூர்த்தி சமயத்தில் விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விசேச பூஜையை செய்கின்றேன் என்று சங்கல்பித்து விஷேஷ அபிஷேகம் பூஜைஷண்முகார்ச்சனை அல்லது சஹஸ்ர நாமார்ச்சனை முதலியவற்றைச் செய்வித்து காப்பு தர்ப்பை இவற்றுடன் தாம்பூலம் தஷிணைவேட்டிசால்வைஅரிசிகாய்கறி முதலிய தானங்களையும் சேர்த்து அர்ச்சகரிடம் சமர்ப்பித்து மகிழ்ச்சியுடன் இந்தத் தானத்தை வழங்குகின்றேன். சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல இந்த விரதபலன்கள் எனக்கு உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசும்,வசிட்டமாமுனிவர் முசுகுந்தச்சக்கர வர்த்திக்கு உபதேசித்த பெருமையையுடையது இது. அரசர்கள்தேவர்கள்முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து பேறு பெற்றனர் இவ்விரதம் தொடர்பான புராணக்கதையை சிந்திக்கலாம்.
சூரன்சிங்கன்தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலம் தேவர்மனிதர் முதலிய யாவரையும் துன்புறுத்தி அழிவு செய்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில் தமது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப்பெருமான் இந்த சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் தோற்று வந்தனர். இதுவே ஸ்கந்தசஷ்டி என்ற பேரில் பூலோகமாகத் தரும் அநுஷ்டிக்கக் கிடைத்தது.
"வேற்போடும் அவுணன்தன்னை வீட்டிய தணிவேற் செங்கை
அற்புதன் தன்னை போற்றி அமரரும் முனிவர் யாரும்
சொற்படு துலையின் திங்கட் சுக்கில பக்கந் தன்னில்
முற்பக வாதியாக மூவிரு வைகல் நோற்றார்’’.
கந்தபுராணம் கந்தவிரதப்படலம் 20
ஈழத்தின் சைவாலயங்கள் பலவற்றில் இன்றும் தொடர்ந்து கந்தபுராணபடனம் செய்யப்படுகிறது. புராணபடனம் என்பது ஒருவர் புராணத்தைப் படிக்க இன்னொருவர் அதன் பொருளைத் தெளிவாக எடுத்துரைத்து விளக்கலாம். பலர் கூடியிருந்து இதனைச் செவிமடுப்பர். முழுப் புராணமும் படிக்க வசதியில்லாத இடங்களில் யுத்தகாண்டத்தில் சூரபன்மன் வதைப்படலம் மட்டுமாவது ஸ்கந்தஷஷ்டி ஆறுநாட்களிலும் படிப்பது வழக்கம். புராணபடலத்தின் மூலம் ஒரே சமயத்தில் பலர் - கல்வியறிவாற்றல் குறைந்தவர்கள் கூட புராணக் கதைகளையும் அவற்றின் வாயிலாகச் சமயப் பேருண்மைகள் பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆறுநாட்போரும் ஆறுபகைகளை வெல்லுதலைக் குறிக்கும் சூரன்சிங்கன்,தாரகன் மூவரும் ஆணவம்கன்மம்மாயை ஆகிய மும்மலங்களையும் தேவர்கள் ஆன்மாக்களையும் முருகப்பெருமான் பரம்பொருளையும் உணர்த்தி நிற்கின்றனர். இவ்விதம் முப்பொருள் உண்மை விளக்குதலே இப்புராணத்தின் நோக்கமெனலாம். ஆன்மாக்களாகிய நாம் எம்மைத் துன்பத்துள் ஆழ்த்தி நிற்கும் காமம்குரோதம்லோபம்மோகம்மதம்மாற்சரியம் ஆகிய ஆறுபகைகளையும் ஆணவாதி மும்மலங்களையும்வென்று ஆண்டவனைச் சென்றடைய வேண்டும் என்ற கருத்தையே ஸ்கந்தஷஷ்டி விரதமும் கந்த புராணமும் வலியுறுத்துகின்றன.
நல்லைக் கந்தன் ஆலயத்தில் கருவறையில் வேல் காட்சியளிக்கிறது. அதற்குரிய வழிபாடு பக்தி பூர்வமானது பாதயாத்திரை செய்து கதிர்காமக்கந்தனை வழிபடும் மரபு சிறப்பானதொன்றாகும். இத் தலத்தில் விழாக்காலத்தில் கருவறையில் இருக்கும் புனிதப்பேழையே இலங்கரித்த யானைமீது பவனி வருகின்றது.நல்லையம் பகுதியில் விழாக்காலங்களில் வேல் பவனி வருவது இங்கு குறிப்படத்தக்கது. கதிர்காம உற்சவத்தோடு கொழும்பு மாநகரில் உள்ள முருகன் ஆலயங்களில் வேல் விழா சிறப்பாக நடைபெறுகின்றது. மாவிட்டபுரம்நல்லூர்மண்டுர்செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த வழிபாட்டு முறைகள் உள்ளன. கந்தனுக்கு மந்திரபூர்;வமான வழிபாடும் மந்திரங்களின்றி பக்தி பூர்;வமான வழிபாடும் உள்ள. தொண்டமனாறு செல்வச்சந்திதி ஆலயத்தில் வேலன் வழிபாடு சிறப்பாக உள்ளது. கதிர்காமத்தோடு ஒத்த பூசை முறை மட்டக்களப்பு மண்டுர் கந்தசுவாமி கோயிலிலும் செல்வச்சந்நிதியிலும் காணப்படுகின்றது. சைவஆசாரத்தோடு ஆலமர இலையில் இறைவனுக்கு உணவு படைக்கும் வழக்கம் செல்வந்சந்நிதி கோயிலில் உள்ளது. பூசை நிறைவேறியவுடன் வழிபடும் அடியவர்களுக்கு திருநீறுதீர்த்தம்மருந்து என மூவகைப் பிரசாதங்கள் பூசகரால் வழங்கப்படுகின்றன. தீராத வினைகளினின்றும் உய்வுபெற அடியார்கள் இவ்வாலயங்களில் பக்தி சிரத்தையுடன் வழிபாட்டில் ஈடுபடுவர். ஆன்னதானக்கந்தன் என்ற சிறப்புத் திருநாமம் செல்வச்சந்நிதி முரகனுக்கு உண்டு. ஆலயங்களில் வழிபடும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் மரபு குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தரது வரலாற்றைக் கூறுமிடத்து பெரியபுராணம்
மண்ணி னிற்பிறந் தார் பெறும் பயன்மகி சூடும்
அண்ண லாரடி யார்தமை அமுது செய்வித்தல்
எனக் குறிப்பிடும் அடிகள் இங்கு சிந்தனைக்குரியன. இறைவழிபாட்டில் அவர் தம் அடியாரை இறைவழிபாட்டில் அவர் தம் அடியாரைப் போற்றுதலும் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்னதானத்தின் வழிமனிதநேயம் மேன்மையடைகின்றது. பூவுலகில் இப்படியான வழிபாடுகளும் பூசைகளும் நடைபெறுவதால் இறைவன் இங்கேயே எழுந்தருளி அருள்புரிகின்ற தன்மை பற்றிக் தேவர்கள் கூட பூமியிற் பிறக்க விரும்புவதாக மணிவாசகர் திருப்பளிளியெழுச்சியில் சிறப்பாகக் பாடியுள்ளார். நல்லைக்கந்தன் வழிபாடுகள் ஆகம வழிபாட்டு மரபு தழுவியவை என்பது வழிபாட்டு மரபு தழுவியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முருக வழிபாடு மிகத் தொண்மையான காலம் முதல் நிலவிவருகிறது. கதிர்காமம்செல்வச்சந்நிதிமண்டுர்திருக்கோயில்ஆகிய பிரசித்திபெற்ற முருகதலங்களிலெல்லாம் வாயைத் துணியாற் கட்டி மௌன பூசை செய்யும் முறை காணப்படுகின்றது. ஆக முறைக்கும்மடாலய முறைக்கும் இடைப்பட்ட பூசைகிரியைகளே நல்லூரில் நடைபெறுவன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் இவற்றை ஆகம முறையில் வழிப்படுத்த முனைந்தும் இனிது நடைபெறவில்லை. இவற்றை நோக்கும் கொழுது
காடுங்காவுங்கவின் பெறுதுருத்தியும்
யானுங் குன்னும் வேறு பல வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுக்பூங்கடம்பு
மன்றமும் பொதியினும் கந்துடைநிலையினு
வேண்டினர் வேண்டியாங் கெய்தினர் வழிபட என்ற திருமுருகாற்றுப்படை அடிகள் எமது நினைவுக்கு வருவன.
மாவட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆகம முறைசார் வழிபாடு உடையது. காங்கேசன்துறைகந்தரோடை கந்தலனக்கடவைகுமாரபுரம் ஆகியனவடக்கிலங்கையில் முருகன் பெயரோடு சார்ந்த பழம்பெரும் ஊர்களாயுள்ளன.
தீ மிதிப்பு
கதிர்காமத்தலத்தில் திருவிழாக்காலங்களில் நடைபெறும் தீ மிதிப்புத் திருவிழாவும்மிகச் சிறப்பாகும். இவை இரு சந்தர்ப்பங்களில் நடைபெறும். முருகன் வாசலிலும்வள்ளியம்மை வாசலிலுமாக நடைபெறும். 20 அடி நீளமும், 8 அடி அகலமும், 1 அடி ஆழமும்கொண்ட அனல் நிறைந்த தீக்குழிக்குள் பக்தர்கள் நேர்த்திகாரணமாகவும்பக்தி மேலீட்டாலும் நடைபயில்வர். சில சந்தர்ப்பங்களில் குமரப்பெருமானும் பக்தர்களோடு பக்தராக தீமிதித்தலிற் கலந்து கொள்வதை பக்தர்கள் அதீதபக்தியால் உணர்வர்.
நீரறுப்பு விழா (தீர்த்தஉற்சவம்)
தீர்த்தோற்சவ நாள் கதிரைக் கந்தனுக்கு மிக உவப்பான நாள் பதினான்கு நாட்களாகும். கதிரைலையானைத் திரிகரண சுத்தியோடு வழிபட்ட அடியார்கள் அவனது திருவருட் சக்தி பெற்றுத் திளைக்கும் நாள் அந்நாள். மாணிக்க நதியின் நீர்;ப்பரப்பின் இரு மருங்கும் பக்த வெள்ளம் பரந்து காணப்படும். காட்டுத்தடிகளாலும்பசுந்தழைகளாவும் பிரத்தியேகமாகக் குடிசை ஒன்று அமைக்கப்படும். நான்கு பக்கங்களும் அடைக்கப்பெற்று ஒரு சிறு வாயிலுடன் காட்சியளிக்கும். சுபமூர்த்தத்திலே முருகப் பெருமான் ஆலயத்திலிருந்து வெளிப்படுவார். விசேடமாகச் செய்யப்பட்டுதுதளப்பத்து ஓலையால் மூடப்பெற்ற காவடியை இரு கப்புராளைகள் தாங்குவர். இவையெல்லாம் துணிப்போர்வையின் உள்ளேயே நடைபெறுவன. புஸநாயக்க நிலமே என்ற சுவாமிக் கப்புராளையும்ஏனைய ஆலயப் பூசகர்களும்யானைதீவட்டிகள் இவை அனைத்தும் சூழவருவர். வள்ளியம்மன் கோயிலினுட் சென்று சுவாமி சிறிது நேரம் தரித்திருப்பார். பின் வள்ளியம்மையார் சகிதம் முருகப் பெருமான் தீர்;த்தமாடக் கொண்டு செல்லப்படுவார்.
மாணிக்க கங்கையின் ஓட்டத்தின் எதிராகச் சென்று குடிசையை அடைந்து வள்ளியம்மையாரையும்ஆறுமுகப் பெருமானையும் குடிசையினுள் வைத்துவிட்டுச்சுவாமிக்கப்புராளை செப்புக்குடமொன்றைக் கொண்டு வருவார். அக்குடத்துடன் மாணிக்க நதியிலிறங்கி நீர்மொண்டு சென்று,கடவுள் தம்பதியினை நீராட்டுவர். குடிசையினுள் மௌமாகப் பூசை வழிபாடு நடைபெறும். பின்னர் காவடி வெளியே கொண்டுவரப்படும். கோடிக்கணக்கான அடியவர் மாணிக்க கங்கையிலே நீராடித் தம்வினை தீர்ப்பர். இதன் பின் முருகப் பெருமானும் வள்ளியம்மையாரும் வள்ளியம்மன் ஆலயத்துள் எடுத்துச் செல்லப்படுவர். அவர்களை நீராட்டிய போது நனைந்த ஆடைகளைப் பிழிந்து அந் நீரைப் பக்தர்கட்குத் தெளிப்பர். தீராநோய் தீர்த்தருளும் ஒளடதமாக இது கருதப்படுகிறது. இரவு 10 மணிவரை ஆறுமுகப் பெருமான் வள்ளியம்மையார் ஆலயத்திற் சுகித்திருப்பர். தெய்வீக அழைப்பின் பின்னரே கப்புறாளை திரும்பவும் சுவாமியைச் சந்நிதிக்கு எடுத்துச் செல்வர். ஆலாத்திப் பெண்கள் ஆலாத்தி எடுத்துச் சுவாமியை வரவேற்பர். பின்னர் பிரசாதம் வழங்கப்படும். தீர்த்தமாடி முடிந்ததுமே நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கால்நடையாகவும்வாகனங்கள் மூலமும் வருகை தந்த அடியார்கள் அரோகரா கூறி விடைபெற்றதுத் தம்மூர் செல்வர்.
இத்தலத்தில் நடைபெறும் வேறு விழாக்கள்
சித்திரை வருடப்பிறப்பன்று மாலை திருவிழா ஒன்று நடைபெறும். கார்த்திகைத் தீபநாள் கோயில்களெங்கும் தீபாலங்காரஞ் செய்யப்பட்டு ஒளிமயமாக விளங்கும். அன்று மாலையிற்திருவிழா ஒன்று நடைபெறும். இவ்விழாக்களும் பக்தர்கள் வருகை தருவர். இவையே இங்கு நடைபெறும் விசேட திருவிழாக்கள்.
ஆடிவேல் விழா
கதிர்காம நீரறுப்பு விழாவோ டொட்டிய விழாவொன்றினைக் கொழும்பு நகரிலேநாட்டுக் கோட்டை நகரத்தார் எனப்படும் செட்டிமார் ஏற்பாடு செய்துள்ளனர். கி. பி. 1818 இல் நடந்த ஊவாக் கலகத்தின் பின் கதிர்காம தரிசனம் மிகக் கஷ்டமானதாயிற்று.
சூரபன்மனைக் கொல்லப் போருக்குச் செல்லுமன் முருகப் பெருமான் வேலாயுதத்திற்குப் பூஜை புரிந்தனர். இதனால் அளவிடமுடியாத சக்திபடைத்த வேலாயுதம் கோயில்களில் மூலஸ்தானத்தில் வைத்துப் பூசிக்கப்படுகிறது.
முற்பட்ட காலப் பகுதிகளில் இந்தியாவிலிருந்து கதிர்காமம்தை தரிசிக்க வரும் யாத்தீரிகர்கள் கங்கை நீரைக் குடத்தில் முகந்தும்மூக்கிற்குழாய்களுள் முகந்துங் கொண்டு வந்து கதிரைப் பெருமானை நீராட்டுவதுண்டு. கதிர்காம உற்சவம் ஆரம்பமானதும் வேல்கள் கொழும்புகண்டிகாலிஇரத்தினபுரி,கம்பளைவதுளை ஆகிய இடங்களிலிருந்து கதிர்காமத்திற்கும் எடுத்துச் செல்வது வழக்கமாயிருந்தது. கால் நடையாகவே இவ் வேல்களை நூற்றுக்கணக்கான அடியவர் புடைசூழ நாட்டுக் கோட்டை நகரத்தவர் கொண்டு செல்வர். இங்ஙனம் வேல் கொண்டு செல்லும் அடியவர் கூட்டம் சிற்சில காலங்களில் வாந்திபேதி என்னும் கொள்ளை நோயாற் பீடிக்கப்;படுவதால் இடையூறு ஏற்பட்டது. காமம் செல்வோர் அனுமதிச் சீட்டுக் பெறவேண்டுமென்ற சட்டத்;;தை நடைமுறைப்படுத்தியது. கி.பி. 1818 இல் ஊhவாப் பகுதியில் நிகழ்ந்த கலகமும் இதற்கொரு காரணமாகலாம். கொள்ளை நோய் பரவிய காலம் 1856 எனக் கொள்ளப்படுகிறது. இச் சட்;டம்1922 இல் நீக்கப்பெற்றது.
கதிர்காமப் பெருமானைத் தரிசிக்க முடியாத நாட்டுக் கோட்டை நகரத்தார்,கொழும்பு நகரிலே பக்தர்கள் முருகப் பெருமானைத் தரிசிக்க சிறந்ததோர் ஏற்பாட்;;டைச் செய்தனர். இவர்கள் கொழும்பிற் செட்டித் தெருவில் புதிய கதிரேசன் கோயிலையும்வெள்ளவத்தை பம்பலப்பிட்டி ஆகிய இரு இடங்களிpல் இரு கோயி;களையும் நிறுவினர். ஏற்கனவே செட்டித்தெருவிலிருந்து பழைய கதிரேசன் கோயிலுக்கு வெள்ளவத்தை கோயிலும் உபய கதிர் காமங்களாயின. தீர்;த்தோற்சவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் வேலாயுதமானது முருகன் திருவுருவுடன் அலங்கரிக்கப்பட்ட இரதத்திலே ஊர்வலமாகக் காலி வீதி வழியாக எடுத்துச் செல்லப்படும். கோயில்களில் தென்னிந்தியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் உபந்நியாசங்கும் இடம்பெறும். கொழும்பு நகரமே விழாக்கோலம் பூண்டு நிற்கும்பூரண கும்பங்கள் குலை வாழைகள்மாலை,தோரணங்கள் இவற்றால் வீதிகளும் கடைகளும் அலங்கரிக்கப்பட்டுப் பெருமான் வரவேற்கப்படுவர். வீதியின் இருமருங்கும் மக்கள் அர்ச்சனை புரிந்து கதிர்காம முருகன்கருணையை வேண்டி நிற்பர். கதிர்காமஞ் செல்லமுடியாதவர்கள் தம் மனக்குறையினை ஈடு செய்து பக்தியிற்றிளைப்பர். ஒரு வருடம் பம்பலப்பிட்டிக்கும் மறு வருடம் வெள்ளவத்;;தைக்குமாக எடுத்துச் செல்லப்படும் வேலானது மூன்று நாட்கள் கோயிலிற்றங்கிப் பக்தகோடிக்கு அருள் வழங்கித் தீர்;த்த முடிவில் வந்தவாறே இருப்பிந் திரும்பும்.
ஏத்தலங்களிலும் இல்லாத அளவு சிறப்பாக இலங்கையிலே முருகத் தலங்களிலே மகோற்சவங்கள் நிகழ்வது வழக்கம். பல்லாயிரக்கணக்கான முரகனடியார்கள் அக்காலங்களிலே குறித்த ஆலயத்திற்கு வந்து பத்திபரவசராய் முருகப்பெருமானை வள்ளி தெய்வான சமேதராய் வழிபட்டு உய்வர். தமிழ்ச் சைவர் மட்டுமன்றி பௌத்தர்களான சிங்கள மக்களும் இவ்விழாக்காலங்களிற் கலந்து வழிபாடு ஆற்றுவது உண்டு. மகோற்சவத்திற்குரிய தலத்தின் சூழல் எங்கும் செபதவவிரதாதிகளின் புனிதம் புலப்பட்டுக் கொண்டே இருக்கும். சுவாமி திருவுலா வருகையில் பஜனைக் குழுக்கள் தொடர்ந்து கந்தரலங்காரம்கந்தரனுபதிதிருமுறைகளை ஒதிச்செல்லும்அங்கப்பிரதட்சணம்அடியழித்து வணங்கல்காவடி எடுத்து ஆடல்கர்ப்பூரச் சட்டி சுமந்து செல்லல். கலைகொண்டு ஆடல்ஆகிய வழிபாடுகளை அடியார்கள் நிகழ்த்துவர். தீக்குளிப்பும் கதிர்காமம் முதலிய தலங்களில் நிகழ்வதுண்டு. செதில்குத்திக் காவடிஆட்டக்காவடி,பாட்டுக்காவடி என்பவற்றோடு தூக்குக் காவடிதுலாக்காவடி முதலான பயங்கர நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வன்தொண்டர்களுக்கும் குறைவிராது. ஆலயங்களின் சூழல்களில் மட்டுமன்றித் தொலை தூரங்களிலும் தண்ணீர்;ப்பந்தல் வைத்து வருகின்ற அடியார்களை உபசரிக்கும் சிவபுண்ணியம்அன்னதானம்ஆகியனவும் இடம்பெறும். மதுமாமிச பட்சணம்,இக்காலத்தில் பலரால் கைவிடப்பட்டு விரதம் அனுட்டிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதே. முருகா முரகா என்ற கோஷம் இடைவிடாது ஆலய வீதிகளிலே ஒலிப்பது பத்திக்கனிவினையூட்டும் நிகழ்ச்சியாகும்.
முருகனுக்குரிய கார்த்திகை நட்சத்திரங்களின் போதும் சிறப்பாகக் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரத்தின் போதும்மாவிளக்கிட்டு வழிபாடு நிகழ்த்துவர். கந்தசஷ்டி ஆறு தினங்களிலும் சங்கற்பம் செய்துகொண்டு முரகனாலயங்களிலேயே தங்கியிருந்து உபவாசம் மேற்கொண்டு தமது ஆன்மாவைப் புனிதம் செய்வோரும்இட்டபூர்த்தியை எதிர்நோக்குபவரும் இலங்கையிலே எண்ணிலர். குலியுகவரதனாகிய முரகனையெ சரணாகதியடைந்து நலந்தீங்கில் அவனை மறவாதிருக்கும் சைவமக்களே இந் நாட்டில் பெரும்பான்மையர் என்று கூறின் அது மிகையன்று.
காவடி விழா
வியாபார நிமித்தமாகத் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த வர்த்தகர்கள்சாம்மாங்கோட்டில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்;தை அமைத்துள்ளனர். பண்டை நாட்களில் இச்;சைவத் தமிழ்மக்களும்,கதிர்காமத்திற்குக் கொழும்பிலிருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கம். பின்னர் கதிர்காம யாத்திரை கடினமானதாக அமையவே அக்காவடியை இவர்கள் வெள்ளவத்தையிலுள்ள சம்மாங்கோட்டு மாணிக்க விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் செல்வாராயினர். ஆடி மாதத்தில் அபிடேகத் திரவியங்களுடன் இரதத்திலே காவடி பவனி வந்து இரு நாட்கள் தங்கியிருந்து ஆயிரக்கணக்கான அடியவர்கட்குத் தரிசனம் அருளிpக் கதிர்காமத்தில் தீர்;த்தம் முடிந்தபின் வந்தவாறே சம்மாங்கோட்டிலுள்ள ஆலயத்திற்கு மீளும்வேல்வழா போன்றே இவ்விழாவும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. கலை நிகழ்ச்சிகள்சமயப் பிரசங்கங்கள் என்பனவும் இந் நாட்களில் இக் கோயில்களில் இடம்பெறும்.
தமிழ் நாட்டில் காவடி ஆட்டம்
கந்தக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாக தமிழ் நாட்டில் காவடியாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்படற்பாலதாகும். தமிழ் நாட்டிலுள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் காவடி விழா எனக்கூறத்தக்க சிறப்புடையனவாக விளங்குகின்றன. பங்குனி உத்தரப் பெருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அறுநூற்றுத்தொண்நூற்ழெற படிகள் ஏறி தீர்;த்தக் காவடிகளும்ஏனைய காவடிகளும் கொண்டு பழனித்திருத்தல முருகனுக்கு காவடி மூலம் காணிக்கை செலுத்துவது அற்புதமான வழிபாடாக இருக்கும். தென்னைமட்டையில் இளநீர்க் குலைகளை கட்டித்துர்க்கிக் கொண்டு எடுக்கும் இளநீர்க்காவடிகளை பழனித்திருத்தலத்தலத்தில் பங்குனி உத்தரத்திருநாளில் பார்க்கமுடியும். மேலும் திருப்பரங்குன்றம்திருத்தணிகைதிருச்செந்தூர் முதலிய முருகன் ஆலயங்களிலும் காவடி வழிபாட்டுமறை சிறப்பாக நிகழ்த்தப்படுகின்றது.
சுமத்திராவில் காவடியாட்டம்.
சுமத்திராவில் உள்ள மேடானில் இந்து சமய வழிபாட்டிற்குரிய பல கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் தண்டாயுதபாணி கோயிலும் ஒன்றாகும். இக் கோயிலில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தைப்பூசத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்விழாக்காலங்களில் நூற்றுக்கணக்கான காவடிகள் முருகனுக்குச் செலுத்தப்படுகின்றன. அவற்றுள் பால்காவடியும்சர்க்கரைக் காவடியும் அதிகமாகக் காணப்படுகின்றன.
தென்னாவிரிக்காவில் காவடியாட்டம்
தென்னாபிரிக்காவில் உள்ள கிளோர்ஷட் என்ற இடத்தில் வசிக்கும் தமிழர்கள் சிவசுப்பிரமணியம் என்ற பெயரில் கந்தனுக்கு ஓர் ஆலயம் அமைத்துள்ளனர். அங்கு தைப்பூசத்தினத்தன்றும் பங்குனி உத்தரத்தன்றும் பக்தர்கள் இன்று காவடி எடுத்து கந்தனை வழிபட்டு வருகின்றனர்.
மலேசியாவில் காவடி ஆட்டம்
முருக வணக்கம் சிறப்புற்று விளங்கும் மலேசியாவில் காவடியாட்டம் சிறப்புடன் விளங்குகின்றது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில்சிகாமட்சிங்காரவடிவேலர் ஆலயம்கங்கைப் பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்ஜோகூர்பாரு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்,காஜாங்சுப்பிரமணியசுவாமி கோவில்கெர்லிங்சுப்பிரமணியர் ஆலயம்,பினாங்கு தண்ணீர்;மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம்ஈப்போ கல்லுமலை முருகன் ஆலயம்பாகங்கைச் சேர்ந்த ரவூப் முருகன் ஆலயம் போன்ற முருகன் ஆலயங்களில் தைப்பூச தினத்தன்று காவடியெடுத்து கந்தக்கடவுளை வழிபட்டு வருகின்றனர். பினாங்கு தண்ணீர் மலை ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெறும் தைப்பூச விழாவில் மலாய்க்காரர்களும் சீனர்களும் கூட காவடியெடுத்துக் கந்தனை வழிபட்டு வருகின்றனர். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் தைப்பூச விழாவிற்கும் காவடி வழிபாட்டிற்கும் பெயர் பெற்று விளங்குகின்றது. தமிழ் நாட்டின் பழனிமலை எப்படியோ அதே போல மலேசியாவில் பத்துமலை விளங்குகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் தைப்பூச விழாவன்று பத்துமலையில் உள்ள இருநாற்றி எழுபத்திரண்டு படிகளை ஏறிச்சென்று மலை உச்சியில் உள்ள குகையில் எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமானுக்கு பக்தர்கள் காவடி எடுத்துக் காணிக்கை செலுத்துகின்றனர். பாற்காவடிபழக்காவடிசர்க்கரைக்காவடிஇளநீர்க்காவடி,பஞ்சாமிர்தக் காவடிஎனப் பல காவடிகளை எடுத்துப் பக்தர்கள் கந்தன் புகழ்பாடி தத்தம் நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். முரகனிடம் தான் கொண்டுள்ள பக்தியை எடுத்துக் காட்டுவதற்காக சிவகரிசக்திகரி என்ற இரண்டு குன்றுகளைத் தன்தோளில் ஒரு தண்டத்தின் உதவியால் இடும்பன்தூக்கியதே தைப்பூசத்தின் வரலாறு என்று இக் கோயிலில் கருதப்படுவதன் காரணமாகவே தைப்பூசத்தன்று இடும்பன் தூக்கிய பிரமதண்டம் அல்லது காவடியை மக்கள் தூக்கிச் சென்று முரகனை வழிபட்டுவருகின்றனர்.
சிங்கப்பூரில் காவடியாட்டம்
சிங்கப்பூரில் உள்ள தண்டாயுபாணி ஆலயத்தில் தைப்பூசத்திருநாளும்,கார்த்திகைத் திருநாளும்பங்குனி உத்தரமும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத்தினத்தன்று சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து கந்தனை வந்தனை செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பண்டைத்தமிழர்கள் முருக வழிபாட்டில் சிறந்து விளங்கினார்கள். முருகனைக் கந்தன் என்ற பெயரில் வழிபடும் வழக்கம் தேவாரகாலம் முதலாக இருந்து வருகின்றது. கந்தனை வந்தனை செய்யும் வழிபாட்டு முறைகளுள் காவடியாட்டம் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. பண்டைத் தமிழரின் வேலன் வெறியாட்டத்துடன் கந்தனின் காவடியாட்டத்தை இணைத்து நோக்க முடிகின்றது. கந்தனுக்குக் காணிக்கைப் பொருட்கள் கொண்டு சென்ற காவுதடியே காவடி எனப் பெயர் பெற்றதென்ற அறிஞர் கருத்து ஏற்புடைத்தாகவுள்ளது. இடும்பன் தூக்கிய சிவகிரி சக்திகிரி என்ற இரண்டு மலைகள் பற்றிக் கூறப்படும் தெய்வீகக் கதையடியாகவே கந்தன் வழிபாட்டில் காவடியாட்டம் இன்றும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. காவடி வழிபாட்டு முறையானது தனிமனித வழிபாட்டு முறையாக மட்டுமன்றி குடும்ப வழிபாட்டு முறையாகவும் விளங்குகின்றது. பக்தர்கள் தத்தம் நேர்த்திக்கடன்களுக்கு ஏற்றவிதத்தில் வௌ;வேறு பெயர்களில் காவடிகள் எடு;த்க் கந்தனை வந்தனை செய்து வருகின்றனர். காவடியில் காணிக்கையாகக் கொண்டு செல்லப்படும் பால்தயிர்தேன்சக்கரைபன்னீர்,இளநீர்முதலான பொருட்கள் ஆண்டவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தூக்குக்காவடிபறவைக்காவடி போன்ற காவடியாட்டங்கள் கடினமான கடவுள் வழிபாட்டு முறையாகக் காணப்படுகின்றன. அளவற்ற அன்பு நன்றியுணர்வு போன்றனவற்றை வெளிப்படுத்தும் வழிபாட்டு முறையாகவே காவடியாட்டம் நிகழ்த்தப்படுகின்றது. ஆன்மீக அனுபவங்களும் ஒரே அனுபவத்தினையே உணர்த்திநிற்கின்றன என்பதனைக் காவடி வழிபாட்டு முறைகள் நன்கு விளக்கி நிற்கின்றன. அக்குபஞ்சர் என்ற சீன மருத்துவ சிகிச்சை முறையினைக் கடினமான காவடிகள் நினைவூட்டி நிற்கின்றன. காவடியை எத்தனை கலையுணர்வோடு அலங்கரித்திருப்பினும் காவடியில் காணப்படும் வேலும்மயிற்பீலிகையும் கந்தனை நினைவுபடுத்துவதாகவே விளங்குகின்றன.