Sunday 26 June 2011

108 போற்றி


முருகன் 108 போற்றி


ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் ஆண்டியே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் அபயா போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் இறைவனே போற்றி
ஓம் இளையவனே போற்றி (10)

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஒன்றே போற்றி
ஓம் ஓங்காரனே போற்றி (20)

ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கடம்பனே போற்றி
ஓம் கவசப்பிரியனே போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கிரிராஜனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி (30)

ஓம் குகனே போற்றி
ஓம் குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி
ஓம் குரவனே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சஷ்டி நாயகனே போற்றி
ஓம் சரவணபவனே போற்றி
ஓம் சரணாகதியே போற்றி (40)

ஓம் சத்ரு சங்காரனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கல்பதியே போற்றி
ஓம் சிங்காரனே போற்றி
ஓம் சுப்பிரமணியனே போற்றி
ஓம் சுரபூபதியே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி
ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி (50)

ஓம் சூழ் ஒளியே போற்றி
ஓம் சூரசம்ஹாரனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
ஓம் சேகரனே போற்றி
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
ஓம் சோலையப்பனே போற்றி (60)

ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞானோபதேசியே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தண்டாயுதபாணியே போற்றி
ஓம் தகப்பன் சாமியே போற்றி
ஓம் திருவே போற்றி
ஓம் திங்களே போற்றி (70)

ஓம் திருவருளே போற்றி
ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி
ஓம் துணைவா போற்றி
ஓம் துரந்தரா போற்றி
ஓம் தென்பரங்குன்றனே போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேயனே போற்றி (80)

ஓம் நாதனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிறணந்தவனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் பழனியாண்டவனே போற்றி
ஓம் பாலகுமாரனே போற்றி
ஓம் பன்னிரு கையனே போற்றி
ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் போகர் நாதனே போற்றி (90)

ஓம் போற்றப்படுவோனே போற்றி
ஓம் மறை நாயகனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மருத மலையானே போற்றி
ஓம் மால் மருகனே போற்றி
ஓம் மாவித்தையே போற்றி
ஓம் முருகனே போற்றி
ஓம் மூவாப் பொருளே போற்றி
ஓம் யோக சித்தியே போற்றி (100)

ஓம் வயலூரானே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி
ஓம் விறலிமலையானே போற்றி
ஓம் வினாயகர் சோதரனே போற்றி
ஓம் வேலவனே போற்றி
ஓம் வேதமுதல்வனே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி (108)

முருகனுக்கு அரோகரா!!!



வேல் 108 போற்றி


கந்தசஷ்டியை ஓட்டி விரதம் இருக்கும் அன்பர்கள் முருகப் பெருமானையும், அவரது வேலையும் வணங்குவது பெரும் பலனைத்தரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத நாட்களில் வேல் அஷ்டோத்திர சத நாமாவாளி எனப்படும் 108 போற்றியைப் படித்தால் பயம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.

ஓம் அருள்வேல் போற்றி
ஓம் அபயவேல் போற்றி
ஓம் அழகுவேல் போற்றி
ஓம் அரியவேல் போற்றி
ஓம் அணைக்கும் வேல் போற்றி
ஓம் அன்புவேல் போற்றி
ஓம் அற்புதவேல் போற்றி
ஓம் அடக்கும்வேல் போற்றி
ஓம் அந்தக எதிர்வேல் போற்றி
ஓம் ஆளும்வேல் போற்றி
ஓம் ஆட்கொள் வேல் போற்றி
ஓம் இனிய வேல் போற்றி
ஓம் இரங்கு வேல் போற்றி
ஓம் இலை வேல் போற்றி
ஓம் இறை வேல் போற்றி
ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
ஓம் ஈடிலா வேல் போற்றி
ஓம் உக்கிரவேல் போற்றி
ஓம் உய்க்கும் வேல் போற்றி
ஓம் எழில்வேல் போற்றி
ஓம் எளியவேல் போற்றி
ஓம் எரிவேல் போற்றி
ஓம் எதிர்வேல் போற்றி
ஓம் ஒளிர்வேல் போற்றி
ஓம் ஒப்பில் வேல் போற்றி
ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
ஓம் ஓங்கார வேல் போற்றி
ஓம் கதிர்வேல் போற்றி
ஓம் கனகவேல் போற்றி
ஓம் கருணைவேல் போற்றி
ஓம் கந்தவேல் போற்றி
ஓம் கற்பக வேல் போற்றி
ஓம் கம்பீர வேல் போற்றி
ஓம் கூர்வேல் போற்றி
ஓம் கூத்தன் வேல் போற்றி
ஓம் கொடுவேல் போற்றி
ஓம் கொற்ற வேல் போற்றி
ஓம் சமர்வேல் போற்றி
ஓம் சம்கார வேல் போற்றி
ஓம் சக்திவேல் போற்றி
ஓம் சதுர்வேல் போற்றி
ஓம் சங்கரன் வேல் போற்றி
ஓம் சண்முக வேல் போற்றி
ஓம் சமரில் வேல் போற்றி
ஓம் சர்வசக்திவேல் போற்றி
ஓம் சினவேல் போற்றி
ஓம் சீறும்வேல் போற்றி
ஓம் சிவவேல் போற்றி
ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி
ஓம் சித்ரவேல் போற்றி
ஓம் சிங்கார வேல் போற்றி
ஓம் சுரர்வேல் போற்றி
ஓம் சுடர்வேல் போற்றி
ஓம் சுழல்வேல் போற்றி
ஓம் சூரவேல்போற்றி
ஓம் ஞானவேல் போற்றி
ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
ஓம் தனிவேல் போற்றி
ஓம் தாரைவேல் போற்றி
ஓம் திருவேல் போற்றி
ஓம் திகழ்வேல் போற்றி
ஓம் தீரவேல் போற்றி
ஓம் தீதழிவேல் போற்றி
ஓம் துணைவேல் போற்றி
ஓம் துளைக்கும்வேல் போற்றி
ஓம் நல்வேல் போற்றி
ஓம் நீள்வேல் போற்றி
ஓம் நுண்வேல் போற்றி
ஓம் நெடுவேல் போற்றி
ஓம் பருவேல் போற்றி
ஓம் பரன்வேல் போற்றி
ஓம் படைவேல் போற்றி
ஓம் பக்தர்வேல் போற்றி
ஓம் புகழ்வேல் போற்றி
ஓம் புகல்வேல் போற்றி
ஓம் புஷ்பவேல் போற்றி
ஓம் புனிதவேல் போற்றி
ஓம் புண்யவேல் போற்றி
ஓம் பூஜ்யவேல் போற்றி
ஓம் பெருவேல் போற்றி
ஓம் பிரம்மவேல் போற்றி
ஓம் பொருவேல் போற்றி
ஓம் பொறுக்கும் வேல் போற்றி
ஓம் மந்திரவேல் போற்றி
ஓம் மலநாசகவேல் போற்றி
ஓம் முனைவேல் போற்றி
ஓம் முரண்வேல் போற்றி
ஓம் முருகன்வேல் போற்றி
ஓம் முக்தி தருவேல் போற்றி
ஓம் ரத்தின வேல் போற்றி
ஓம் ராஜவேல் போற்றி
ஓம் ருத்திரவேல் போற்றி
ஓம் ருணவிமோசன வேல் போற்றி
ஓம் வடிவேல் போற்றி
ஓம் வஜ்ரவேல் போற்றி
ஓம் வல்வேல் போற்றி
ஓம் வளர்வேல் போற்றி
ஓம் வழிவிடுவேல் போற்றி
ஓம் வரமருள்வேல் போற்றி
ஓம் விளையாடும் வேல் போற்றி
ஓம் வினைபொடி வேல் போற்றி
ஓம் வீரவேல்போற்றி
ஓம் விசித்திர வேல் போற்றி
ஓம் வெல்வேல் போற்றி
ஓம் வெற்றிவேல் போற்றி
ஓம் ஜயவேல்போற்றி
ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி


திருமுருகன் 108 போற்றி


தனலாபம், பூமிலாபம், எதிரிகளிடம் வெற்றி,
ரோஹ நிவாரணம், செவ்வாய் தோஷ நிவர்த்தி
திருமணம் போன்றவைகளுக்கு செவ்வாய்க்கிழமை
தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை
வள்ளி தெய்வானையுடன் மனதில் உருவகித்து
இந்த போற்றியை பாராயணம் செய்ய வாழ்வில்
வளம் பெறலாம்.

ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி

ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி 8

ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி 16

ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி


ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செவ்வேள் போற்றி 24

ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி


ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி 32


ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஔவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி 40

ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் அறுபடை வீடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி 48


ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி


ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி 56

ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவா போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி

ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி 64

ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி


ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி 72

ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி 80

ஓம் கருணைபொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி 88

ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி 96

ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்ச் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமரா போற்றி

ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் இருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி 104

ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
ஓம் போற்றி ...போற்றி ... ஜெய ஜெய வேலவா போற்றி 108

முருகா, ஸ்கந்தா, சண்முகா இன்னல்கள் நீக்கி
நின்னைச்சரணடைவோருக்கு எல்லா நலமும்
வளமும் தந்தருள்வாய் ஆறுபடையப்பா....
குமரா...உன் திருவடி தொழுதனம் போற்றியே.....






No comments:

Post a Comment